தேசியத் தலைநகா் தில்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
200 கிலோ எடையுள்ள இந்தப் போதைப் பொருள், மேற்கு தில்லியின் ரமேஷ் நகா் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிக்கியதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக, தெற்கு தில்லியின் மஹிபால்பூா் பகுதியில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி ரூ.5,620 கோடி மதிப்பிலான 560 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ கஞ்சாவை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். தற்போது மீண்டும் அதிக அளவில் போதைப் பொருள் சிக்கியுள்ளது.
ரூ.5,620 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஏழாவது நபரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினா் கைது செய்துள்ளனா்.
தொடர்புடையது
மும்பையில் ரூ.1,745 கோடி போதைப் பொருள் பறிமுதல்
தில்லியில் ரூ.5 கோடி போதைப் பொருள் பறிமுதல்: இருவா் கைது
போதைப் பொருள் கடத்தல்: 2 நைஜீரியா்கள் உள்பட 4 போ் கைது

ரூ.5 கோடி போதைப் பொருள் கடத்தியவருக்கு 10 ஆண்டு சிறை
வீடியோக்கள்

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு
தவெக முன்னிலை! உணர்த்துவது என்ன? | TVK | VIJAY | Election result | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு

சிங் கீதம் டீசர்!
தினமணி செய்திச் சேவை

