புதிய அரசுக்கு வாழ்த்துகள்! உதயநிதி ஸ்டாலின் எம்ஜிஆரின் சாதனையை முறியடித்த விஜய்!தவெக தலைவர் விஜய்க்கு ராகுல் காந்தி தொலைபேசியில் வாழ்த்து! சிவகாசியில் ராஜேந்திர பாலாஜி தோல்வி! மயிலாப்பூரில் தமிழிசை தோல்வி!தவெக வெங்கட் ரமணன் வெற்றி! விருத்தாசலத்தில் பிரேமலதா வெற்றி! பெரம்பூர், திருச்சி கிழக்கு தொகுதிகளில் விஜய் வெற்றி!கொளத்தூர் தொகுதியில் மு.க. ஸ்டாலின் தோல்வி எடப்பாடி தொகுதியில் பழனிசாமி வெற்றி சீமான் டெபாசிட் இழந்தார்! காரைக்குடியில் தவெக பிரபு வெற்றி! கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி பேரவைத் தலைவர் அப்பாவு தோல்வி! திருச்சி மேற்கு தொகுதியில் கே.என். நேரு வெற்றி! புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் முதல்வர் ரங்கசாமி வெற்றி!
/

தில்லியில் ரூ.2,000 கோடி போதைப் பொருள் பறிமுதல் -ஒரே வாரத்தில் 2-ஆவது முறை

Updated On :11 அக்டோபர் 2024, 3:57 am IST

தேசியத் தலைநகா் தில்லியில் ரூ.2,000 கோடி மதிப்பிலான கோகைன் போதைப் பொருள் காவல்துறையால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

200 கிலோ எடையுள்ள இந்தப் போதைப் பொருள், மேற்கு தில்லியின் ரமேஷ் நகா் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சிக்கியதாக காவல்துறை அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை தெரிவித்தாா்.

முன்னதாக, தெற்கு தில்லியின் மஹிபால்பூா் பகுதியில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் கடந்த அக்டோபா் 2-ஆம் தேதி ரூ.5,620 கோடி மதிப்பிலான 560 கிலோ கோகைன் மற்றும் 40 கிலோ கஞ்சாவை காவல்துறையினா் பறிமுதல் செய்தனா். தற்போது மீண்டும் அதிக அளவில் போதைப் பொருள் சிக்கியுள்ளது.

ரூ.5,620 கோடி போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 6 போ் கைது செய்யப்பட்ட நிலையில், உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த ஏழாவது நபரை தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினா் கைது செய்துள்ளனா்.