நாசிக்கில் பயிற்சியின்போது குண்டுவெடித்து 2 அக்னிவீரர்கள் பலி

நாசிக்கில் பயிற்சியின்போது குண்டுவெடித்து 2 அக்னிவீரர்கள் பலி
அக்னிவீரர்கள் - பிரதி படம்
அக்னிவீரர்கள் - பிரதி படம்Center-Center-Bangalore
Published on
Updated on
1 min read

மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள பீரங்கி மையத்தில் இன்று குண்டுகளை வெடிக்க வைக்கும் பயிற்சியில் அக்னிவீரர்கள் ஈடுபட்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக குண்டுவெடித்து 2 வீரர்கள் பலியாகினர்.

வியாழக்கிழமை மதியம் இந்த விபத்து நடந்ததாகக் காவல்துறையினர் தற்போது தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில், அக்னிவீரர்கள் கோஹில் விஷ்வராஜ் சிங் (20), சைஃபத் ஷிட் (21) என்ற இளைஞர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர்.

துப்பாக்கி மற்றும் குண்டுகளை வைத்து பயிற்சி எடுத்தபோது, திடீரென ஒரு குண்டு வெடித்ததில் படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட போது மரணமடைந்ததாக மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com