மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாகிஸ்தான் ட்ரோனை சுட்டுவீழ்த்திய பி.எஸ்.எஃப். படையினர்!

பஞ்சாப் பகுதியில் பறந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை(ட்ரோன்) பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.

News image
கோப்புப்படம்
Updated On :12 அக்டோபர் 2024, 7:03 am

DIN

பஞ்சாப் பகுதியில் பறந்த பாகிஸ்தான் ஆளில்லா விமானத்தை(ட்ரோன்) பாதுகாப்புப் படையினர் சுட்டுவீழ்த்தினர்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையான பஞ்சாப் பகுதிகளில் அவ்வப்போது பாகிஸ்தானுக்குச் சொந்தமான ஆளில்லா விமானம் வருவதும் எல்லை பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டுவீழ்த்துவதும் அடிக்கடி நடந்து வருகிறது. 

இந்நிலையில் நேற்று(வெள்ளிக்கிழமை) சர்வதேச எல்லையில் பஞ்சாபின் ஃபெரோஸ்பூர் பகுதியில் பாகிஸ்தானில் இருந்து வந்த ஆளில்லா விமானம் பறந்தது. அப்போது ரோந்து பணியில் இருந்த பாதுகாப்புப் படையினர் அதனை சுட்டு வீழ்த்தியுள்ளனர்.

அதில் 500 கிராம் ஹெராயின், துப்பாக்கி மற்றும் ஒரு நாளிதழ் இருந்ததாக அதிகாரிகள் இன்று தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.