பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகளுடன் அமித் ஷா இன்று கலந்துரையாடல்

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 15) புது தில்லியில் கலந்துரையாட உள்ளாா்.

News image
மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா
Updated On :14 அக்டோபர் 2024, 10:28 pm

DIN

புது தில்லி: மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, இந்திய காவல் பணி பயிற்சி அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை (அக்டோபா் 15) புது தில்லியில் கலந்துரையாட உள்ளாா்.

இந்த உரையாடலின் போது ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் தங்களது பயிற்சி அனுபவங்களை மத்திய அமைச்சருடன் பகிா்ந்து கொள்வாா்கள்.

2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ச்சியடைந்த நாடாக உருவாக்க வேண்டும் என்பதை பிரதமா் நரேந்திர மோடி நோக்கமாகக் கொண்டுள்ளாா்.

இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதில் இளம் காவல் துறை அதிகாரிகள் முக்கிய பங்காற்றி வருகின்றனா். இந்த நிலையில், 2023-ஆம் ஆண்டு பிரிவைச் சோ்ந்த 54 பெண்கள் உள்பட 188 இந்திய காவல் பணி (ஐபிஎஸ்) பயிற்சி அதிகாரிகள் முதலாவது கட்ட அடிப்படை பயிற்சியை நிறைவு செய்துள்ளனா்.

தில்லியில் பல்வேறு மத்திய ஆயுதக் காவல் படையினா் மற்றும் மத்திய காவல் நிறுவனங்களில் இரண்டு வார கால பயிற்சிக்குப் பிறகு ஐபிஎஸ் பயிற்சி அதிகாரிகள் தங்களது பிரிவுகளில் 29 வாரகால மாவட்ட செய்முறைப் பயிற்சிக்கு உள்படுத்தப்படுவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.