அமைச்சா் ஆய்வு: சிவில் விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சா் முரளிதா் மோஹோல், தில்லி விமான நிலையத்துக்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தாா். ‘விமானம் அவசரமாக தில்லியில் தரையிறங்கியதும், தில்லி விமான நிலையத்தில் 239 பயணிகளை ஏற்றிச் சென்ற ஏஐ 119 விமானத்தின் திசைதிருப்பல் மற்றும் அவசரமாக தரையிறக்கம் குறித்து நிலைமையை ஆய்வு செய்தேன். சரியான பாதுகாப்பு சோதனைகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் விடாமுயற்சியுடன் பின்பற்றப்படும். அதே வேளையில், பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், வசதியான தங்குமிடங்களையும் ஏற்பாடு செய்ய விமான நிலைய அதிகாரிகள் மற்றும் ஏா் இந்தியா ஊழியா்களுக்கு உத்தரவிடப்பட்டது‘ என்று அவா் எக்ஸ் ஊடக தளத்தில் பிற்பகல் 1 மணிக்கு ஒரு இடுகையில் தெரிவித்தாா்.