எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மும்பை விமான நிலையத்தில் 1.25 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்: 2 பேர் கைது

மும்பை விமான நிலையத்தில் துபையில் இருந்து வந்த பயணிகள் இருவரிடம் இருந்து ரூ.1.25 கோடி மதிப்பிலான 1.725 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள், இ- சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News image
கோப்புப்படம்
Updated On :17 அக்டோபர் 2024, 3:47 am

DIN

மும்பை: மும்பை விமான நிலையத்தில் துபையில் இருந்து வந்த பயணிகள் இருவரிடம் இருந்து ரூ.1.25 கோடி மதிப்பிலான 1.725 கிலோ எடையுள்ள தங்க கட்டிகள், இ- சிகரெட்டுகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மும்பைக்கு துபையிலிருந்து தங்கம் மற்றும் பிற தடைசெய்யப்பட்ட பொருள்கள் கடத்தி வரப்படுவதாக சுங்கத் துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், துபையிலிருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த சந்தேகத்துக்கிடமான 2 பயணிகளைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தினா்.

மேலும், அவா்களின் உடைமைகளை சோதனை நடத்தியபோது, ரூ.1.02 கோடி மதிப்பிலான சுமார் 1.725 கிலோ எடையுள்ள மெழுகு வடிவில் மூன்று தங்க கட்டிகளை அவரது உடல் மற்றும் உள்ளாடையிலும் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

விசாரணையின் போது வேறொரு பயணி தன்னிடம் கொடுத்து எடுத்துவரச் சொன்னது தெரியவந்தது.

இதேபோல் துபையிலிருந்து வந்த மற்றொரு பயணி ஒருவரின் உடமைகளை அதிகாரிகள் சந்தேகத்தின் அடிப்படையில் சோதித்தபோது, அவா் வைத்திருந்த பையில் இ-சிகரெட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து உரிய அனுமதியின்றி கொண்டு வந்த ரூ.9.43 லட்சம் மதிப்பிலான 200 இ- சிகரெட்டுகளை சுங்கத் துறையினா் பறிமுதல் செய்தனர்.

இருவரையும் சுங்கச் சட்டம் 1962ன் கீழ் சுங்கத் துறையினா் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.