உணவு பாதுகாப்பு சட்ட திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய முதல்வர் விஜய் கோரிக்கை!கம்யூனிசம் உலகில் கம்பீரமாக நடைபோட்டுக் கொண்டிருக்கிறது! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்ஹிட்லர், முசோலினியின் வரலாற்றைப் படியுங்கள் மிஸ்டர் டிரம்ப்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தனியார் பள்ளிகள் மீதான அக்கறையை அரசுப் பள்ளிகளுக்கு காட்டாதது ஏன்? தவெக அரசுக்கு சீமான் கேள்வி!சர்வதேச தரவரிசையில் இந்திய பாஸ்போர்ட் சரிவு: மோடி மீது கார்கே குற்றச்சாட்டு!குடியரசுத் தலைவரிடம் நற்சான்றிதழ்களை சமர்ப்பித்த 6 நாட்டின் தூதர்கள்!தவெக அரசுக்கு கவசமாக இருப்போம்: வைகோ மகாராஷ்டிரத்தில் தொடர் மழை: இதுவரை 13 பேர் பலி
/

ஓர் ஆபாச விடியோவின் விலை ரூ. 20,000: 17 வயது சிறுவன் கைது!

உத்தரப் பிரதேசத்தில் சிறார் ஆபாச விடியோக்களை விற்று வந்த சிறுவன் கைது

News image
Updated On :17 அக்டோபர் 2024, 8:36 pm IST

உத்தரப் பிரதேசத்தில் சிறார் ஆபாச விடியோக்களை விற்று வந்த சிறுவரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

உத்தரப் பிரதேசத்தில் கோரக்பூரில் 17 வயதான சிறுவர் ஒருவர், ராஜ் என்பவரிடம் இருந்து ஆபாச விடியோக்களை பெற்று, அவற்றை விலைக்கு விற்று வந்துள்ளார். ராஜிடமிருந்து டெலிகிராமில் செயலி மூலம் ஆபாச விடியோக்களை பெற்று, அதனை ஒரு விடியோவுக்கு ரூ. 3000 முதல் ரூ. 20000 வரையில் கட்டணமாக வசூலித்து வந்துள்ளார்.

வசூலில் 30 சதவிகிதத்தை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதப் பணத்தை ராஜூவுக்கு அளித்து வந்துள்ளார். இதுதொடர்பாக, கோரக்பூர் சைபர் காவல் துறைக்கு ஒரு தன்னார்வ அமைப்பிடமிருந்து தகவல் கிடைத்ததையடுத்து, இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், ஆபாச விடியோக்களை விற்று வந்த சிறுவனை கைது செய்தனர். சிறுவனிடமிருந்த கைப்பேசியை பறிமுதல் செய்ததில், அவரிடம் சுமார் 4000 சிறார் ஆபாச விடியோக்கள் இருப்பது தெரிய வந்தது.

இந்த புகார் தொடர்பாக, சிறுவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், இந்த வலையமைப்பில் தொடர்புடைய மற்றவர்களும் தேடப்பட்டு வருவதாக மூத்த காவல் கண்காணிப்பாளர் கௌரவ் குரோவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.