பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது! ரத்தன் டாடா உருவாக்கிய விதிமுறை

ரத்தன் டாடா உருவாக்கிய விதிமுறையால், நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக ஆக முடியாது என்று தகவல்.

News image

நோயல் டாடா

Updated On :24 அக்டோபர் 2024, 11:56 am

ரத்தன் டாடா மறைவுக்குப் பிறகு, அவரது சகோதரர் நோயல் டாடா, டாடா அறக்கட்டளையின் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால், அவர் டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்று தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, கடந்த 2022ல் ரத்தன் டாடா உருவாக்கிய விதியின் காரணமாக, நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

டாடா நிறுவனங்களையும் தாண்டி, 10க்கும் மேற்பட்ட டாடா நிறுவனங்களை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் டாடா சன்ஸ் தலைவராக, நோயல் டாடா எப்போதும் ஆக முடியாது என்றும் கூறப்படுகிறது.

நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாமல் போவது இது ஒன்றும் புதிதல்ல. 13 ஆண்டுகளுக்கு முன்பும் கூட, அவர் டாடா சன்ஸ் தலைவராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் அப்பதவியை அடைய முடியாமல் போனது.

2011ஆம் ஆண்டு, டாடா சன்ஸ் தலைவர் பதவியிலிருந்து ரத்தன் டாடா விலகிய போதும், நோயல் டாடா, தலைவர் பதவிக்கு தகுதியுடையவர் என பேசப்பட்டது. ஆனால், அப்போதும், அந்தப் பதவி நோயல் டாடாவுக்கு வழங்கப்படாமல், அவரது உறவினர் சைரஸ் மிஸ்திரிக்கு வழங்கப்பட்டது.

தொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில் பல குழுமங்களுக்கும் அறக்கட்டளைகளுக்கும் தலைவர்கள் நியமிக்கப்படும் போதெல்லாம், நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராவாரா என்று கேள்வி எழுவதும். ஆனால், ஆகாமல் போவதும் தொடர்கதையாகி இருந்து வந்த நிலையில், இப்போதும் அதுவே தொடர்ந்துவிட்டது.

அதாவது, ரத்தன் டாடா தலைமையின் கீழ் டாடா குழுமம் இருந்த போது, 2022ஆம் ஆண்டு ஒரு புதிய விதிமுறை உருவாக்கப்பட்டது. அதாவது, டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர்களாக ஒரே நேரத்தில் ஒரே நபர் இருக்கக் கூடாது என்பதே அந்த விதி.

எனவே, டாடா அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் நோயல் டாடா, டாடா சன்ஸ் தலைவராக முடியாது. கடைசியாக, டாடா சன்ஸ் மற்றும் டாடா அறக்கட்டளையின் தலைவர்களாக ஒரே நேரத்தில் ஒருவரே இருந்தார் என்றால் அது ரத்தன் டாடா தான்.

இந்த விதிமுறை உருவாகக் காரணம், டாடா சன்ஸ், அனைத்துடாடா குழும நிறுவனங்களையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும், குறிப்பிட்ட பங்கும் கைவசம் இருக்கும். டாடா அறக்கட்டளை டாடா சன்ஸ்-ன் 66 சதவீத பங்குகளைக் கொண்டிருக்கும். இதன்படி பார்த்தால், டாடா அறக்கட்டளையின் தலைவர் கிட்டத்தட்ட டாடா சன்ஸ் மீது அதிக ஆதிக்கம் கொண்டவராக இருப்பார். எனினும், டாடா சன்ஸ் தலைவருக்குத்தான் குழும நிறுவனங்களின் மீது நேரடியான அதிகாரம் இருக்கும். எனவேதான், டாடா அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் ஒருவர், அதே நேரத்தில், டாடா சன்ஸ் தலைவராக முடியாது என்ற விதியை ரத்தன் டாடா உருவாக்கியிருக்கிறார் என்று கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.