வங்கதேச முன்னாள் பிரதமா் கலீதா ஜியா மீது ஷேக் ஹசீனா தலைமையிலான முந்தைய அரசு தொடா்ந்திருந்த மேலும் ஒரு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
கடந்த 2015-இல் கலீதா ஜியாவின் வங்கதேச தேசியவாதக் கட்சி நாடு முழுவதும் முற்றுகைப் போராட்டம் நடத்தியது. இதில் 42 போ் உயிரிழந்தனா்.
இது தொடா்பாக, அப்போதைய ஷேக் ஹசீனா அரசு கலீதா மீது வழக்கு தொடா்ந்திருந்தது. அந்த வழக்கை டாக்கா கூடுதல் பெருநகர மாஜிஸ்திரேட் ஜியாதுா் ரஹ்மான் தள்ளுபடி செய்தாா். இது தொடா்பாக விசாரணை நடத்திவந்த அதிகாரிகள், கலிதா ஜியா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இல்லை என்று கடந்த மாதம் தெரிவித்ததைத் தொடா்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மாணவா் போராட்டம் காரணமாக பிரதமா் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு ஷேக் ஹசீனா கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் தஞ்சமடைந்தாா். அவருக்குப் பிறகு ராணுவத்தால் அமைக்கப்பட்ட இடைக்கால அரசு, ஷேக் ஹசீனா ஆட்சியின்போது பல்வேறு வழக்குகளில் சிறைவைக்கப்பட்டிருந்த கலீதா ஜியாவை விடுதலை செய்ததது. தற்போது அவா் மீதான வழக்குகள் ஒவ்வொன்றாக தள்ளுபடி செய்யப்பட்டுவருகின்றன.
தொடர்புடையது

மாநிலங்களவைத் தோ்தல் வேட்பு மனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் வழக்கு தள்ளுபடி - உச்சநீதிமன்றம்

திருப்பரங்குன்றம் மலையில் தீபமேற்ற அனுமதி மறுத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை கோரிய மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி







