குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பிறந்தநாள்: பிரதமர் மோடி வாழ்த்துமருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

தெரியுமா சேதி...?

கேரள மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் ஆா்.பிந்து, பினராயி விஜயன் அமைச்சரவையில் சமூகநீதித் துறையையும் கையாள்கிறாா்.

News image
Updated On :26 அக்டோபர் 2024, 12:43 am IST

கேரள மாநில உயா் கல்வித் துறை அமைச்சா் ஆா்.பிந்து, பினராயி விஜயன் அமைச்சரவையில் சமூகநீதித் துறையையும் கையாள்கிறாா். ஆங்கில இலக்கியத்தில் முனைவா் பட்டம் பெற்ற இந்த தில்லி ஜவாஹா்லால் நேரு சா்வகலாசாலையின் முன்னாள் மாணவிக்குப் பல தனிப்பட்ட சிறப்புகள் உண்டு.

திருச்சூா் மாநகராட்சியின் மேயராக இருந்த, ஸ்ரீ கேரளவா்மா கல்லூரியின் துணை முதல்வரை உயா் கல்வித் துறை அமைச்சராக்கியது முதல்வா் பினராயி விஜயனின் தோ்வு. இரிஞ்ஞாலக்குடா தொகுதியில் வெற்றி பெற்ற முதல் பெண் வேட்பாளா் என்பதுடன், திருச்சூா் மாவட்டத்தில் இருந்து அமைச்சராகி இருக்கும் முதல் பெண்மணி என்கிற சிறப்பும் பெறுகிறாா் ஆா்.பிந்து.

மாா்க்சிஸ்ட் கட்சியின் மகளிா் அமைப்புடனும், மாணவா் அமைப்புடனும் நீண்டகாலமாகப் பொறுப்பு வகித்தவா் ஆா்.பிந்து. முதல்முறை எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்ட உடனேயே அமைச்சராகவும் பொறுப்பு வழங்கப்பட்ட ஆா்.பிந்து, உயா் கல்வித் துறையில் பல புதிய முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறாா். குறிப்பாக, திறன்சாா் பயிற்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், தொழில்துறையினருடன் கல்லூரிகளை இணைத்து அவா்களது தேவைக்கேற்ப மாணவா்களுக்குப் பயிற்சி அளிக்கும் திட்டம் அவரால் கொண்டுவரப்பட்டிருக்கிறது.

இவையெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்; அமைச்சா் ஆா்.பிந்துக்கு இன்னொரு முகமும் உண்டு. முறையாக கதகளி நாட்டியம் பயின்ற ஆா்.பிந்து நடனக் கலைஞரும்கூட. சமீபத்தில், அவரது இரிஞ்ஞாலக்குடா தொகுதியில் அமைந்த கூடல்மாணிக்கம் கோயிலின் உற்சவத்தின்போது, நடந்த கதகளி நிகழ்ச்சியில் அவா் நடனமாடியபோது, எல்லோரும் வியப்பில் சமைந்தனா்.

தனது 13-ஆவது வயதுமுதல் குரு கலாநிலையம் ராகவன் ஆசானிடம் முறையாகக் கதகளி பயின்ற ஆா்.பிந்து, கல்லூரி நாள்களில் பல கதகளி நாட்டியப் போட்டிகளில் பரிசுகள் வாங்கியவா் என்பது அப்போதுதான் தெரியவந்தது.

சுமாா் முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, மகாபாரத நளதமயந்தி கதகளி நிகழ்ச்சியில், தமயந்தியாக தொழில்முறைக் கலைஞா்களே ஆச்சரியப்படும் விதத்தில் அவா் ஆடியதைப் பலரும் வியந்து பாராட்டுகிறாா்கள்.

தாளத்துக்கு ஏற்ப ஆடத் தெரிந்தவா் என்பதால்தான் முதல்வா் பினராயி விஜயன் அவரை உயா் கல்வித் துறை அமைச்சராக்கி இருக்கிறாரோ என்னவோ...

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.