திருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ரூ.8 கோடி சொத்துக்காக.. கணவரைக் கொன்ற பெண் சிக்கியது எப்படி?

ரூ.8 கோடி சொத்துக்காக கணவரைக் கொன்ற பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

News image
கொலை வழக்கு
Updated On :28 அக்டோபர் 2024, 10:35 am

DIN

தெலங்கானாவின் உப்பல் பகுதியைச் சேர்ந்த பெண், தனது கணவரின் ரூ.8 கோடி சொத்துக்காக அவரைக் கொன்று, சுமார் 800 கிலோ மீட்டர் பயணித்து கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உடலை வீசிய கொடூரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தில், கொலையான தொழிலதிபரின் மனைவி நிஹாரிகா, அவரது ஆண் நண்பர் நிகில் உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொலை குறித்து காவல்துறையினர் கூறுகையில், தெலங்கானாவில், தனது பெயரில் இருக்கும் சொத்துகளை மனைவி பெயரில் மாற்றித் தர ஒப்புக்கொள்ளாததால் தொழிலதிபரான ரமேஷ் (55) அக். 1ஆம் தேதி அவரது மனைவியால் கொலை செய்யப்பட்டார். அவரது உடலை காரில் எடுத்துக்கொண்டு 800 கிலோ மீட்டர் பயணித்து, கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் ரமேஷின் உடலைப் போட்டு எரித்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள் குற்றவாளிகள்.

குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

மூன்று வாரங்களுக்கு முன்பு, எரிந்த நிலையில் இருந்த உடலைக் கைப்பற்றிய காவல்துறையினருக்கு, கொலை செய்யப்பட்டவரது உடல் எரிந்துவிட்டதால் அடையாளம் காண்பதே சவாலாக இருந்தது.

அதன்பிறகு, அப்பகுதிக்கு அருகே இருந்த சிசிடிவி காட்சிகளைக் கைப்பற்றியதில், ஒரு சிவப்பு நிற கார். காவல்துறையின் கண்ணில் பட்டது. அந்தக் காரின் எண்ணைக் கொண்டு, அது தெலங்கானாவைச் சேர்ந்த ரமேஷ் என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்டறிந்தனர். அப்போதுதான், ரமேஷ் காணாமல் போனதாக தெலங்கானாவில், அவரது மனைவி புகார் கொடுத்திருந்ததும் அவர்களுக்குத் தெரிய வந்தது.

இதையடுத்து, கர்நாடக காவல்துறையினர், தெலங்கானா காவல்துறையினருடன் இணைந்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.

முதலில், காணாமல் போன ரமேஷ்தான் கொலை செய்யப்பட்டவர் என்று தெரிய வந்ததும். அவரது மனைவி மீது காவல்துறைக்கு சந்தேகம் வந்தது. அவரது மனைவியிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், அவர் தனது நண்பருடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

பிறகு நடத்தப்பட்ட விசாரணையில், பொறியியல் படித்த நிகாரிகா, சிறு வயதில் திருமணமாகி, பின்பு விவாகரத்தானவர் என்பதும், பண மோசடியில் சிறை சென்று அங்கு சிலருடன் பழகிய நிலையில், வெளியே வந்து ரமேஷை ஏமாற்றி இரண்டாவது திருமணம் செய்துகொண்டு, அவரது சொத்துகளை மோசடி செய்ய திட்டமிட்டு, பிறகு அது கொலையில் முடிந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.