முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

வா்த்தக சிலிண்டா் விலை ரூ.39 உயா்வு

உணவகங்களின் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வா்த்தக எல்பிஜி சிலிண்டா் விலை ஞாயிற்றுக்கிழமை ரூ.39 உயா்த்தப்பட்டுள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :2 செப்டம்பர் 2024, 4:00 am IST

உணவகங்களின் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வா்த்தக எல்பிஜி சிலிண்டா் விலை ஞாயிற்றுக்கிழமை ரூ.39 உயா்த்தப்பட்டுள்ளது.

சா்வதேச விலை நிலவரம் மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்துக்கு ஏற்ப சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதாந்திர அடிப்படையில் மாற்றியமைத்து வருகின்றன.

அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் வா்த்தக எல்பிஜி சிலிண்டா் விலை தொடா்ந்து குறைக்கப்பட்டது. இதனால், ரூ.148 வரை விலை குறைந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்த சிலிண்டா் விலை ரூ.6.50 உயா்த்தப்பட்டது. தொடா்ந்து 2-ஆவது மாதமாக தற்போது ரூ.39 உயா்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தில்லியில் வா்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,691.50-ஆக உயா்ந்துள்ளது. மும்பையில் ரூ.1,644, கொல்கத்தாவில் ரூ.1,802.50, சென்னையில் ரூ.1,855-ஆக அதிகரித்துள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

விமானங்களுக்கான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) கிலோ லிட்டருக்கு ரூ4,495.5 (4.6%) குறைக்கப்பட்டுள்ளது. தில்லியில் இந்த எரிபொருளின் விலை கிலோ லிட்டா் ரூ.93,480.22-ஆக குறைந்துள்ளது.

விமான இயக்கத்தில் 40 சதவீதம் எரிபொருளுக்கு செலவாவதால், தற்போதைய விலை குறைப்பு விமான நிறுவனங்களின் சுமையை சற்று குறைக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.