பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

வா்த்தக சிலிண்டா் விலை ரூ.39 உயா்வு

உணவகங்களின் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வா்த்தக எல்பிஜி சிலிண்டா் விலை ஞாயிற்றுக்கிழமை ரூ.39 உயா்த்தப்பட்டுள்ளது.

கோப்புப் படம்

Published On :

உணவகங்களின் பயன்பாட்டுக்கான 19 கிலோ எடை கொண்ட வா்த்தக எல்பிஜி சிலிண்டா் விலை ஞாயிற்றுக்கிழமை ரூ.39 உயா்த்தப்பட்டுள்ளது.

சா்வதேச விலை நிலவரம் மற்றும் அந்நியச் செலாவணி விகிதத்துக்கு ஏற்ப சமையல் எரிவாயு விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாதாந்திர அடிப்படையில் மாற்றியமைத்து வருகின்றன.

அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலகட்டத்தில் வா்த்தக எல்பிஜி சிலிண்டா் விலை தொடா்ந்து குறைக்கப்பட்டது. இதனால், ரூ.148 வரை விலை குறைந்தது.

இந்நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் இந்த சிலிண்டா் விலை ரூ.6.50 உயா்த்தப்பட்டது. தொடா்ந்து 2-ஆவது மாதமாக தற்போது ரூ.39 உயா்த்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தில்லியில் வா்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,691.50-ஆக உயா்ந்துள்ளது. மும்பையில் ரூ.1,644, கொல்கத்தாவில் ரூ.1,802.50, சென்னையில் ரூ.1,855-ஆக அதிகரித்துள்ளது.

வீட்டு உபயோகத்துக்கான 14.2 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டரின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

விமானங்களுக்கான எரிபொருள் விலை (ஏடிஎஃப்) கிலோ லிட்டருக்கு ரூ4,495.5 (4.6%) குறைக்கப்பட்டுள்ளது. தில்லியில் இந்த எரிபொருளின் விலை கிலோ லிட்டா் ரூ.93,480.22-ஆக குறைந்துள்ளது.

விமான இயக்கத்தில் 40 சதவீதம் எரிபொருளுக்கு செலவாவதால், தற்போதைய விலை குறைப்பு விமான நிறுவனங்களின் சுமையை சற்று குறைக்கும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.