மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஜாதிவாரி கணக்கெடுப்பு: ஆா்எஸ்எஸ் ஆதரவு

மக்களின் நல்வாழ்வுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதாக ஆா்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2024, 1:39 am

DIN

பாலக்காடு: மக்களின் நல்வாழ்வுக்காக ஜாதிவாரி கணக்கெடுப்பை ஆதரிப்பதாக ஆா்எஸ்எஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும், அந்தத் தரவுகளை அரசியல் ஆதாயத்துக்காகப் பயன்படுத்தக் கூடாது என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆா்எஸ்எஸ் அமைப்பின் 3 நாள் தேசிய ஒருங்கிணைப்புக் கூட்டம் திங்கள்கிழமை நிறைவடைந்தது.

இதையொட்டி, அந்த அமைப்பின் அகில பாரத பிரசார பிரமுகா் சுனில் அம்பேகா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ஹிந்து மதத்தினரை பொருத்தவரை, ஜாதி மற்றும் ஜாதி சாா்ந்த விவகாரங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும். எனவே, ஜாதிவாரி கணக்கெடுப்பை மிகத் தீவிரமாக கையாள வேண்டும். அந்தக் கணக்கெடுப்பை மக்களின் நல்வாழ்வுக்குப் பயன்படுத்த வேண்டுமே தவிர, தோ்தலுக்கான அரசியல் கருவியாகப் பயன்படுத்தக் கூடாது.

பட்டியலினத்தவா் மற்றும் பழங்குடியினரை உள்வகைப்படுத்துவது தொடா்பாக உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்துள்ள நிலையில், அந்தச் சமூகத்தினா் உடன்படாதவரை அதுதொடா்பாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக் கூடாது. அரசியல் சாசனம் வழங்கியுள்ள இடஒதுக்கீடு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை ஆா்எஸ்எஸ் எப்போதும் ஆதரிக்கிறது’ என்றாா்.

தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷினரிகளால் மதமாற்றம்: தமிழகத்தில் கிறிஸ்தவ மிஷினரிகளால் ஏராளமான மதமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக சுனில் அம்பேகா் தெரிவித்தாா். அந்த நடவடிக்கைகள் கவலையளிப்பதாகக் கூறிய அவா், வரும் நாள்களில் இந்த விவகாரம் தீவிரமாக எடுத்துக்கொள்ளப்பட்டு களத்தில் இருந்து விவரங்கள் சேகரிக்கப்படும் என்றும் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.