திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

உன்னாவ், ஹத்ராஸ் பற்றி யாரும் பேசுவதில்லை: மமதா கொடுத்த பதிலடி

உன்னாவ், ஹத்ராஸ் பற்றி யாரும் பேசுவதில்லை என்று மமதா பதிலடி கொடுத்துள்ளார்.

News image

மேற்கு வங்க பேரவையில் - பிடிஐ

Updated On :3 செப்டம்பர் 2024, 3:51 pm IST

கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கிய நிலையில், உன்னாவ் மற்றும் ஹத்ராஸ் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை, அது பற்றி யாரும் பேசுவதில்லை என்று மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியிருக்கிறார்.

மேற்கு வங்க மாநிலத்தில், பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், வழக்கு விசாரணை சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மமதா பானர்ஜி ராஜிநாமா செய்ய வேண்டும் என்று பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வரும் நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.

சட்டப்பேரவையில் பேசிய மமதா பானர்ஜி, உன்னாவ் மற்றும் ஹத்ராஸ் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இன்னும் நீதி கிடைக்கப்படவில்லை, ஆனால் அதுபற்றி யாரும் பேசுவதில்லை என்று, நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய இரண்டு சம்பவங்கள் குறித்து பேசினார்.

மேலும், பாரதிய நியாய சன்ஹிதாவை, மத்திய அரசு, மாநில அரசுடன் கலந்தாலோசிக்காமல் கொண்டுவந்துள்ளது, தற்போதிருக்கும் சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை புதிய சட்ட மசோதா கவனத்தில் கொண்டு திருத்தப்பட்டுள்ளது என்றும் மமதா கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.