ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பாலியல் குற்றங்களைத் தடுக்க அபராஜிதா! மேற்கு வங்க பேரவையில் மசோதா நிறைவேற்றம்!

பாலியல் குற்றங்கள் தடுப்பு மசோதா மேற்கு வங்க பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

News image
மமதா பானர்ஜி
Updated On :3 செப்டம்பர் 2024, 9:04 am

DIN

பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதா மேற்கு வங்க பேரவையில் இன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை வழங்க வகை செய்யும் வகையில், அபராஜிதா மகளிர் மற்றும் குழந்தைகள் சட்ட மசோதா -2024 (மேற்கு வங்க குற்றவியல் சட்டங்கள் மற்றும் திருத்தம்) கொண்டு வரப்பட்டுள்ளது. இது மகளிர் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர் இறந்தால் அல்லது நினைவிழத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டால், குற்றவாளிக்கு மரண தண்டனை வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை மேற்கு வங்க சட்டப்பேரவையில் மாநில முதல்வர் மமதா பானர்ஜி இன்று தாக்கல் செய்தார்.

முன்னதாக, பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்த மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில், மேற்கு வங்க அரசு சட்டத்திருத்தம் கொண்டு வரும். அந்தச் சட்டத்திருத்தம் மாநில சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும். இந்தச் சட்டத்திருத்தத்துக்கு மாநில ஆளுநா் ஒப்புதல் அளிக்காவிட்டால் அல்லது குடியரசுத் தலைவருக்கு அனுப்பினால் ஆளுநா் மாளிகை எதிரே நான் தா்னா போராட்டத்தில் ஈடுபடுவேன் என்று எச்சரித்திருந்தார். இந்த நிலையில்தான் புதிய மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.

முதல்வர் மமதா தக்கல் செய்த மசோதாவுக்கு மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை உறுப்பினர்களின் ஒப்புதல் பெறப்பட்டதையடுத்து ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

மசோதாவை தாக்கல் செய்து பேசிய மமதா பானர்ஜி, பாலியல் பலாத்கார தடுப்பு மசோதா, விரைவான விசாரணை, விரைவான நீதி மற்றும் குற்றவாளிகளுக்கு தண்டனையை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த மசோதா நிறைவேற்றப்பட்டதும், சிறப்பு அபராஜிதா அதிரடிப் படை உருவாக்கப்பட்டு, விசாரணையை முடிப்பதற்கான கால அவகாசம் நிர்ணயிக்கப்படும் என்று மமதா கூறியுள்ளார்.

மேலும், இந்த மசோதா மூலம், குற்றவாளிகள் தப்பிச் செல்ல சட்டங்களில் இருக்கும் ஓட்டைகள் மூடப்பட்டுள்ளன என்றும், பெண் மருத்துவருக்காகக் குரல் கொடுத்த ஒவ்வொருவருக்கும் எனது பாராட்டுதல்களை நான் இங்கு தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், பாலியல் பலாத்காரம் என்பது மனிதநேயத்துக்கு எதிரான சாபம். இதுபோன்ற குற்றச்செயல்களைத் தடுக்க சமூக மாற்றம் தேவை என்றார்.

இந்த சட்ட மசோதாவில் கையெழுத்திடும்படி, எதிர்க்கட்சியினர், மாநில ஆளுநரிடம் கேட்டுக்கொள்ள வேண்டும், இது நமது கடமை, சிபிஐயிடம் இருந்து நியாயம் கிடைக்க வேண்டும், குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் மமதா வலியுறுத்தினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.