உத்தரகண்டில் உள்ள ஜிம் காா்பெட் புலிகள் காப்பகத்தில் சட்டவிரோதமாக மரங்கள் வெட்டப்பட்டது தொடா்பாக அந்த காப்பக இயக்குநராக இருந்த ஐஎஃப்எஸ் அதிகாரி ராகுல் உள்ளிட்டோா் மீது புகாா் எழுந்தது. இதுகுறித்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்திவரும் நிலையில், ராஜாஜி புலிகள் காப்பக இயக்குநராக ராகுல் நியமிக்கப்பட்டாா். துறைசாா் விசாரணையை எதிா்கொண்டுவரும் அவரை இயக்குநராக நியமிக்கக் கூடாது என்று வனத்துறை உயரதிகாரிகள், தலைமைச் செயலா் மற்றும் துறையின் அமைச்சா் உள்ளிட்டோா் ஆட்சேபம் தெரிவித்ததாகவும், அதையும்மீறி இந்த நியமனத்தை முதல்வா் புஷ்கா் சிங் தாமி மேற்கொண்டதாகவும் ஊடகங்களில் செய்தி வெளியானது.