ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது நடப்பு சாம்பியன் ஆர்ஜென்டீனா செமிகண்டக்டா், கைப்பேசி உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.1.9 லட்சம் கோடி- மத்திய அமைச்சரவை ஒப்புதல் மகாராஷ்டிரத்தை ஆளும் பாஜக கூட்டணியில் இணைகிறதா சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ்? சுப்ரியா சுலே பதில் இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் எல்பிஜி சிலிண்டா் உடனடி விநியோகம் நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் ‘ஸ்மாா்ட் வாட்ச்’ அணிய கூடாது: மக்களவை செயலகம் அமலானது இந்தியா-பிரிட்டன் வா்த்தக ஒப்பந்தம்! விவசாயிகள், எம்எஸ்எம்இ-க்கு புதிய உத்வேகம்: பிரதமா் மோடி கட்டாய ராணுவ சேவையிலிருந்து தீவிர ஆா்த்தடாக்ஸ் யூதா்களுக்கு விலக்கு
/

முதல்வர் யார் என்பதை மக்கள் தேர்வு செய்வார்கள்: சஞ்சய் ரெளத்

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் யார் என்பதை மக்கள் தேர்வு செய்வார்கள் என்றார் சஞ்சய் ரெளத்.

News image

சஞ்சய் ரெளத் - கோப்புப் படம்

Updated On :5 செப்டம்பர் 2024, 8:15 pm IST

மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் யார் என்பதை மக்கள் தேர்வு செய்வார்கள் என சிவசேனை கட்சியின் மூத்த தலைவரும் எம்.பி.யுமான சஞ்சய் ரெளத் இன்று (செப். 5) தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மகா விகாஸ் அகாதி கூட்டணியில் முதல்வர் வேட்பாளரைத் தேர்வு செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது.

இந்தியா கூட்டணி சார்பில் மகாராஷ்டிர முதல்வர் வேட்பாளராக அறிவிக்கக் கோரிய சிவசேனை மூத்த தலைவர் உத்தவ் தாக்கரேவின் கோரிக்கையை காங்கிரஸ் தலைமை ஏற்க மறுப்பு தெரிவித்தது.

முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் தில்லி சென்று, காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்துப் பேசியதும் பலனளிக்கவில்லை. கூட்டணியில் உள்ள தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாரும் உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவு தெரிவிக்கவில்லை.

இந்நிலையில் இது குறித்துப் பேசிய சஞ்சய் ரெளத் பேசியதாவது,

''முதல்வர் யார் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள். தங்கள் மனதில் உள்ளவர்களை அவர்கள் தேர்வு செய்வார்கள். யார் அதிக தொகுதிகளில் வெற்றி பெறுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால், மகா விகாஸ் அகாதி கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும். ஊழல் மிகுந்த அரசை வெளியேற்றுவதே எங்கள் முதல் இலக்கு. அதன் பிறகு முதல்வர் யார் என்பதை ஆலோசித்து முடிவெடுப்போம்'' எனக் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.