பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகிய சுஜீத் குமார் இன்று பாஜகவில் இணைந்தார்.
தில்லியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் அவர் பாஜகவில் தன்னை இணைந்துக்கொண்டார்.
பிஜு ஜனதா தளத்தைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினரான சுஜீத் குமார், வெள்ளிக்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.
மாநிலங்களவைத் தலைவருக்கு அவர் எழுதிய ராஜிநாமா கடிதத்தில், உணர்வுபூர்வமாக இந்த முடிவை எடுத்ததாக சுஜீத் குமார் குறிப்பிடுள்ளார்.
அவரது ராஜிநாமாவை குடியரசுத் துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கர் ஏற்றுக்கொண்டார். இதற்கிடையே அவர் ராஜிநாமா செய்த உடனேயே, சுஜீத் குமாரை கட்சியில் இருந்து பிஜு ஜனதா தளம் நீக்கியது.
மயூர்பஞ்ச் மாவட்டத்தைச் சேர்ந்த மம்தா மோகந்தா பிஜு ஜனதா தளத்தில் இருந்து விலகிய ஒரு மாதத்திலேயே மற்றொரு எம்.பி.யான சுஜீத் குமாரும் கட்சியில் விலகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஒடிசாவில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் குளறுபடிகள்: பிஜு ஜனதா தளம் குற்றச்சாட்டு

மாநிலங்களவைத் தோ்தலில் கட்சி மாறி வாக்களிப்பு: எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்யும் எதிா்க்கட்சிகளின் கோரிக்கை மனுக்கள் நிராகரிப்பு

ஆளுங்கட்சியினருக்கு அரசியல் முதிர்ச்சி இல்லை: நயினார் நாகேந்திரன்








