மேற்கு வங்க சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட, அபராஜிதா என்ற பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதாவை அம்மாநில ஆளுநர் சி.வி. ஆனந்த் போஸ், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளார்.
பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கும் சட்டத் திருத்த மசோதா மேற்கு வங்க சட்டப்பேரவையில் கடந்த 3ஆம் தேதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
'அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதா 2024' எனப் பெயரிடப்பட்ட இந்த மசோதா, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைத் தடுத்து (குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்கி) பாதுகாப்பளிக்கும் வகையில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்த மசோதாவை ஆளுநர் சி.வி.ஆனந்த் போஸ், குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் ஒப்புதலுக்காக அனுப்பிவைத்துள்ளார்.
இது தொடர்பாக மேற்கு வங்க ஆளுநர் மாளிகை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,
அபராஜிதா மசோதாவை குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்கு அனுப்பினார் மேற்கு வங்க ஆளுநர். மேற்கு வங்க அரசின் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதா குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், மசோதாவின் விவரங்களை அதன் உரிய மொழியாக்கத்தை விதிகளின்படி வழங்குவதில் மாநில சட்டப்பேரவை தவறியதற்கு ஆளுநர் மாளிகை அதிருப்தி தெரிவிக்கிறது.
மேற்குவங்க அரசு கொண்டுவந்துள்ள வன்கொடுமை தடுப்பு மசோதாவைப் போன்று, ஆந்திரம், மகாராஷ்டிரம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் மசோதாக்கள் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்டு, அவை நிலுவையிலேயே உள்ளது. எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காவிட்டால் ஆளுநர் மாளிகைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபடுவோம் என்ற முதல்வர் மம்தா பானர்ஜியின் அறிவிப்பும் மேற்கோள் கட்டப்பட்டது. அரசியலமைப்பு உரிமைகளைக் கடைபிடிப்பதில் மாநில நிர்வாகம் தவறிவிட்டதாகவும் ஆளுநர் மாளிகை பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மசோதாவின் சிறப்புகள்
நாட்டில் பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் பொருட்டு அபராஜிதா பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன.
அதன்படி,
பெண்களை பாலியல் கொலை செய்தாலோ அல்லது பாலியல் துன்புறுத்தலால் பெண்கள் சுயநினைவை இழந்து பெரிதும் பாதிக்கப்பட்டாலோ இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூட்டுப் பாலியல் வன்கொடுமை அல்லது பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு பரோல் இன்றி ஆயுள் தண்டனை வழங்கவும் மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க அமைச்சரவையில் யார் யாருக்கு என்னென்ன துறைகள்?

மமதா பதவி விலக மறுப்பு... மேற்கு வங்க சட்டப்பேரவையைக் கலைத்தார் ஆளுநர் ஆர்.என். ரவி!

திரிணமூல் காங்கிரஸை பெண்கள் தண்டிப்பா்: பிரதமா் மோடி

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த மேற்கு வங்க ஆளுநர்!
விடியோக்கள்

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரம்! முகத்தை மூடி வந்தது யார்?” பேரவையில் பிரேமலதாவின் கேள்விகள்! | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு


