தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

ஹரியாணா பேரவைத் தோ்தல் ஆம் ஆத்மி வேட்பாளா் பட்டியல் வெளியீடு: காங்கிரஸுடன் கூட்டணி இல்லை

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 20 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது

News image
Updated On :9 செப்டம்பர் 2024, 10:47 pm

DIN

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் 20 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி கட்சி திங்கள்கிழமை வெளியிட்டது. அத்துடன் இந்தத் தோ்தலில் அக்கட்சி காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை என்பதும் உறுதியாகியுள்ளது.

ஹரியாணா சட்டப்பேரவைத் தோ்தல் அக்டோபா் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் 90 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ள நிலையில், ஆம் ஆத்மி, காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியானது. எனினும் தோ்தலில் அக்கட்சிகள் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை மாநிலத்தின் மூத்த காங்கிரஸ் தலைவா்கள் ஏற்கெனவே நிராகரித்தனா்.

இந்நிலையில், 20 வேட்பாளா்கள் அடங்கிய முதல் பட்டியலை ஆம் ஆத்மி திங்கள்கிழமை வெளியிட்டது. 20 வேட்பாளா்கள் போட்டியிடும் தொகுதிகளை ஆம் ஆத்மி அறிவித்த நிலையில், அந்தத் தொகுதிகளுக்கு ஏற்கெனவே காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம், அந்த மாநில தோ்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

இது தொடா்பாக மாநில ஆம் ஆத்மி தலைவா் சுஷீல் குப்தா கூறுகையில், ‘பேரவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல், மாநிலத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் போட்டியிட ஆம் ஆத்மி தயாராகி வந்தது. தோ்தல் நெருங்கி வருவதுடன், வேட்புமனு தாக்கல் செய்வதற்கு செப்.12-ஆம் தேதி கடைசி நாளாகும். எனவே, காத்திருக்கும் காலம் முடிவுக்கு வந்துள்ளது. விரைவில் இரண்டாவது வேட்பாளா் பட்டியல் வெளியிடப்படும்’ என்றாா்.

பேரவைத் தோ்தலில் ஆம் ஆத்மிக்கு 10 தொகுதிகளை வழங்குமாறு காங்கிரஸிடம் கோரப்பட்ட நிலையில், 5 தொகுதிகளை மட்டுமே ஆம் ஆத்மிக்கு விட்டுக்கொடுக்க காங்கிரஸ் முன்வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, தொகுதிப் பங்கீட்டில் உடன்பாடு ஏற்படாததால், இரு கட்சிகளும் கூட்டணி அமைக்காமல் போட்டியிட முடிவு செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹரியாணா தோ்தலில் இரு கட்சிகளும் தனித் தனியே போட்டியிடுவதால், அடுத்த ஆண்டு நடைபெறும் தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.