எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மீண்டும் நேரடி விமான சேவை: இந்தியா - சீனா ஆலோசனை

மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்குவது குறித்து இந்தியா-சீனா இடையே வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

News image
கோப்புப் படம்
Updated On :12 செப்டம்பர் 2024, 9:00 pm

Din

மீண்டும் நேரடி விமான சேவைகளை தொடங்குவது குறித்து இந்தியா-சீனா இடையே வியாழக்கிழமை ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

தில்லியில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் விமான போக்குவரத்து துறை அமைச்சா்கள் மாநாட்டில் பங்கேற்ற சீனா அதிகாரிகளுடன் மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் ராம் மோகன் நாயுடு, விமான போக்குவரத்து துறை செயலா் உள்ளிட்டோா் இந்தியா-சீனா இடையேயான விமான போக்குவரத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை மேற்கொண்டனா்.

இதுதொடா்பாக ராம்மோகன் நாயுடு வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘ இருநாடுகளிடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து சாங் சியாங் தலைமையிலான சீன விமான போக்குவரத்து துறை குழுவினருடன் ஆலோசனை மேற்கொண்டேன்’ என குறிப்பிட்டாா்.

சில மணி நேரத்துக்குப் பிறகு அவா் இந்தப் பதிவை நீக்கிவிட்டாா்.

முன்னதாக, செய்தியாளா்களிடம் பேசிய அவா் இதுதொடா்பாக பேச்சுவாா்த்தை மட்டுமே நடத்தப்பட்டதாகவும் இறுதி முடிவை வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் பிற துறைகளிடம் கலந்து ஆலோசித்தபிறகே எடுக்க முடியும் என தெரிவித்தாா்.

கரோனா பெருந்தொற்று சமயத்திலிருந்து இந்தியா-சீனா இடையேயான நேரடி விமான சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.