மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

தீண்டாமையை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்: மோகன் பாகவத்!

நாம் தீண்டாமை உணர்வை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

News image
Updated On :16 செப்டம்பர் 2024, 9:18 am IST

நாம் தீண்டாமை உணர்வை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் கூறியுள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்திலுள்ள அல்வார் நகரில் இந்திரா காந்தி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ’அல்வாரின் கர சேவகர்கள்’ நிகழ்வில் பேசிய மோகன் பாகவத், “நாம் நமது மதத்தினை மறந்துவிட்டு சுயநலமாக இருக்கின்றோம். இதனால்தான் தீண்டாமை ஆரம்பமானது. சமூகத்தில் உயர்ந்தவர், தாழ்ந்தவர் என்ற எண்ணம் உருவானது. இனி, இந்த உணர்வினை நாம் முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். சமூக நல்லிணக்கத்தின் மூலமே மாற்றத்தைக் கொண்டு வரமுடியும்.

கர சேவகர்கள் சமூக நல்லிணக்கம், சுற்றுச்சூழல், குடும்ப மதிப்பு, சுதேசி மற்றும் சமூகக் கடமைகள் போன்ற ஐந்து விஷயங்களைத் தங்களது வாழ்வுடன் இணைத்துக் கொள்ளவேண்டும். இதனை நமது தொண்டர்கள் வாழ்வுடன் இணைத்துக் கொண்டால், சமூகமும் இதனைப் பின்பற்றும்.

நமது சங்கம் அடுத்த ஆண்டில் 100-வது ஆண்டை எட்டுகிறது. நமது சங்கம் நீண்டகாலமாக பணி செய்து வருகிறது. நாம் பணியில் ஈடுபடும்போது அதன் பின்னணியைப் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறினார்.

மேலும் பேசிய அவர், ”நமது தேசம் வலுப்பெற வேண்டும். இது இந்து தேசம் என்று நமது பிரார்த்தனையில் சொல்லி வருகிறோம். ஏனெனில், இந்த தேசம் உருவாகக் காரணம் இந்து சமுதாயம் தான். இந்த தேசத்திற்கு ஏதாவது நல்லது நடந்தால், இந்து சமுதாயத்தின் பெருமை உயரும். இந்த தேசத்தில் ஏதேனும் தவறு நடந்தால், அதன் பழி இந்து சமுதாயத்தின் மீது விழும்.

நம் நாடு பெருமையாகவும், தகுதியானதாகவும் மாறவேண்டும்.. நமது முழு சமூகமும் திறமையாக இருக்க வேண்டும்.

நமது சங்கத்தை முன்பு யாரும் நம்பவில்லை. இன்று அனைவரும் இதை நம்புகின்றனர். நம்மை எதிர்ப்பவர்களும் கூட. அவர்களின் உதடுகள் நம்மை எதிர்த்தாலும், இதயங்கள் நம்மை நம்புகின்றன. எனவே, இப்போது நாம் தேசத்தின் அனைத்துத் துறை வளர்ச்சிக்காக இந்து மதம், இந்து கலாச்சாரம் மற்றும் இந்து சமுதாயத்தை பாதுகாக்க வேண்டும்” என்று மோகன் பாகவத் பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.