வெள்ளை அறிக்கை அல்ல; வெற்று அறிக்கை - தங்கம் தென்னரசுநாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து கேஜரிவால் வெளியேறுவது எப்போது? ஆம் ஆத்மி பதில்

கேஜரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து எப்போது வெளியேறுகிறார் என்று ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

News image

அரவிந்த் கேஜரிவால் - Center-Center-Delhi

Updated On :18 செப்டம்பர் 2024, 12:37 pm IST

தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்திலிருந்து எப்போது வெளியேறுவார் என ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் தெரிவித்தார்.

கலால் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த வெள்ளியன்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்த நிலையில், நேற்று முதல்வர் பதவியிலிருந்து விலகும் கடிதத்தைத் துணைநிலை ஆளுநர் வி.கே.சக்ஸேனாவிடம் கேஜரிவால் அளித்தார்.

இதற்கு முன்னதாக செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் கடசியின் மூத்த நிர்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்குடன் அரவிந்த் கேஜரிவால் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில எடுக்கப்பட்ட முடிவின்படி துணைநிலை ஆளுநர் சிக்ஸேனாவுடன் ராஜ் நிவாஸில் கட்சியின் மூத்த நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்த்தினர்.

இதையடுத்து புதிய முதலவராக கல்வி அமைச்சர் அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், ஆட்சியமைக்க துணைநிலை ஆளுநரிடம் நேற்று அதிஷி உரிமை கோரினார். இந்த நிலையில் தில்லியின் முதல்வராக அதிஷி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதையடுத்து தில்லியின் மூன்றாவது பெண் முதல்வர் இவராவார்.

இந்த நிலையில் செய்தியாளர்களை சந்திந்த சஞ்சய் கூறியது,

முதல்வராக இருந்தபோது கேஜரிவால் அனுபவித்த அனைத்து வசதிகளையும் விட்டு, அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து அடுத்த ஒரு வாரத்தில் காலி செய்வார் என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

நேற்று ராஜினாமா செய்த கேஜரிவால், ஒரு முதல்வருக்குக் கிடைக்கும் பாதுகாப்பு உள்பட அனைத்து வசதிகளையும் விட்டுவிட்டு மக்கள் மத்தியில் சாமானியனாக வாழ்வேன் என்று கேஜரிவால் கூறினார்.

கேஜரிவால் சிறையிலிருக்கும்போது உடல் ரீதியாக தீங்கு விளைவிக்கும் முயற்சிகள் நிறைய நடந்ததாகவும், ஆனால் அவர் அதை தடுக்கவில்லை. கடந்த 155 நாள்கள் சிறையில் வாழ்ந்தேன் அப்போது கடவுள் என்னைக் காப்பாற்றினார். இப்போதும் கடவும் என்னைக் காப்பாற்றுவார் என்று கேஜரிவால் கூறியுள்ளார்.

கேஜரிவால் எங்கு வசிக்கிறார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று ஆம் ஆத்மி தலைவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.