ஈரான் மீதான தாக்குதல் மேலும் 5 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

தூய்மை மட்டுமே ஆரோக்கியமான, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும்: திரௌபதி முர்மு!

தூய்மை மட்டுமே இந்தியாவை ஆரோக்கியமாக வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும்..

News image

துப்பரவுத் தொழிலாளருக்கு பரிசு வழங்கும் குடியரசுத் தலைவர்

Updated On :19 செப்டம்பர் 2024, 7:13 am

பிடிஐ

தூய்மை மட்டுமே இந்தியாவை ஆரோக்கியமான வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

உஜ்ஜையினில் நடைபெற்ற சஃபாய் மித்ரா சம்மேளனத்தில் உரையாற்றிய முர்மு,

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரம் தொடர்ந்து ஏழாவது முறையாகத் தூய்மைக் கணக்கெடுப்பில் முதலிடத்தில் உள்ளதாகவும், போபால் நாட்டிலேயே தூய்மையான மாநிலத் தலைநகராக திகழ்கிறது என்றும் பாராட்டினார்.

சஃபாய் மித்ராக்களை (துப்புரவுத் தொழிலாளர்கள்) கௌரவிப்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. தூய்மை மட்டுமே நாட்டை ஆரோக்கியமான, வளர்ச்சியடைந்த நாடாக மாற்றும். துப்புரவுத் தொழிலாளிகளைக் கௌரவிப்பதன் மூலம் நன்மை நாமே போற்றிக் கொள்கிறோம் என்று அவர் கூறினார்.

இந்தியா சுத்தம், ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சியடைந்த நாடாக மாற மக்கள் ஒருபடி முன்னேறிச் செல்லுமாறு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

கடந்த 10 ஆண்டுகளில் "ஸ்வச் பாரத் மிஷன்" நாடு தழுவிய இயக்கமாக மாறியுள்ளது. இதன் விளைவாக நாட்டில் விரிவான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று அவர் கூறினார்.

இந்த பேரணி மக்களிடையே தூய்மை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகளுக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்ததற்காக அரசுக்கு அவர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில், நான்கு பெண்கள் உள்பட ஐந்து துப்புரவுத் தொழிலாளர்களை முர்மு பாராட்டி பரிசுகளை வழங்கினார். மேலும் ரூ.1,692 கோடி செலவில் கட்டப்படவுள்ள உஜ்ஜைன்-இந்தூர் ஆறு வழிச் சாலைக்கு அடிக்கல் நாட்டினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.