மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

வன்முறையைத் தவிர்த்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: கிரண் ரிஜிஜு!

மணிப்பூர் மக்கள் வன்முறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வர வேண்டும்..

News image
கிரண் ரிஜிஜு
Updated On :21 செப்டம்பர் 2024, 10:09 am

பிடிஐ

இனக்கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் ஆயுதங்களைத் தவிர்த்து, பேச்சு வார்த்தை மூலம் அமைதிக்கான நிரந்தரத் தீரவைக் காண வேண்டும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு மக்களைக் கேட்டுக் கொண்டார்.

மை ஹோம் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட மாணவர் விழாவில் ரிஜிஜு உரையாற்றினார். நரேந்திர மோடி ஆட்சியில் வடகிழக்கு மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் முன்னெப்போதும் இல்லாத வளர்ச்சியைக் கண்டு வருவதாகவும், அப்பகுதி மக்களுக்குப் பொன்னான வாய்ப்பை வழங்குவதாகவும் அவர் கூறினார்.

மணப்பூர் கலவரம் தொடர்பாக இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் செய்ய தயாராக இருப்பதாகவும், குகி மற்றும் மைதேயி சமூகத்தின் சகோதர சகோதரிகள் ஆயுதத்தைக் கைவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

ஆயுதம் ஏந்துவதால் எந்தவித தீர்வும் கிடைக்காது. பேச்சு வார்த்தை மூலமே எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காண முடியும். அப்போதுதான் நிரந்தரமான அமைதியைப் பெற முடியும்

“இது நம் அனைவருக்கும் கிடைத்த பொன்னான வாய்ப்பு" இதுபோன்ற நேரத்தில், மணிப்பூர் மக்கள் வன்முறையைக் கைவிட்டு, பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண முன்வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

மணிப்பூரில் ஓராண்டாக நிலவும் மோதல்..

மணிப்பூரில் பெரும்பான்மையாக உள்ள மைதேயி சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே கடந்தாண்டு மே மாதத்திலிருந்து, ஓராண்டுக்கும் மேலாக மோதல்போக்கு நீடித்து வருகிறது.

மைதேயி சமூகத்தினர் தங்களுக்குப் பழங்குடியின அந்தஸ்து கோரும் நிலையில், குகி பழங்குடியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இதுவே, மோதலுக்கு முக்கியக் காரணமாகும். இந்த மோதலில் இதுவரை 200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து, நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.