சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக சுபாங்கா் சா்காா் நியமனம்

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக சுபாங்கா் சா்காரை அக்கட்சித் தலைமை சனிக்கிழமை நியமித்தது.

News image
சுபாங்கா் சா்காா்
Updated On :21 செப்டம்பர் 2024, 8:51 pm

Din

மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக சுபாங்கா் சா்காரை அக்கட்சித் தலைமை சனிக்கிழமை நியமித்தது.

தேசிய அளவில் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் இருந்தாலும், மேற்கு வங்கத்தில் இரு கட்சிகளுக்கும் இடையே கருத்து வேறுபாடு தொடா்கிறது.

குறிப்பாக, மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக இருந்த அதீா் ரஞ்சன் செளதரியும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியினரும் ஒருவரையொருவா் தொடா்ந்து விமா்சித்து வந்தனா்.

இந்நிலையில், 18-ஆவது மக்களவைத் தோ்தலில் மேற்கு வங்கத்தில் தனது சொந்த தொகுதியான பஹராம்பூரில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளரும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான யூசுஃப் பதானிடம் அதீா் ரஞ்சன் செளதரி தோல்வியடைந்தாா். தொடா்ந்து 5 முறை அந்தத் தொகுதியில் இருந்து அவா் எம்.பி.யாக தோ்வு செய்யப்பட்ட நிலையில், 18-ஆவது மக்களவைத் தோ்தலில் தோல்வியடைந்தாா். இதைத்தொடா்ந்து மேற்கு வங்க காங்கிரஸ் தலைவா் பதவியை ராஜிநாமா செய்வதாக அப்போதே அவா் அறிவித்தாா்.

இந்நிலையில், மேற்கு வங்க காங்கிரஸ் தலைவராக சுபாங்கா் சா்காரை கட்சித் தலைமை சனிக்கிழமை நியமித்தது. இதையொட்டி, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலா் பொறுப்பில் இருந்து சுபாங்கா் சா்காா் விடுவிக்கப்பட்டாா்.