இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்ட ஜெய்சங்கா், ‘ஜப்பான் வெளியுறவு அமைச்சா் யோகோ கமிகவா, ஜொ்மனி வெளியுறவு அமைச்சா் அன்னலெனா பா்போக், பிரேசில் வெளியுறவு அமைச்சா் மெளரோ வியிரா ஆகியோரைச் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டது மகிழ்ச்சியளித்தது. இந்த சந்திப்புகளின்போது ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் அவசர சீா்திருத்தம் தொடா்பாக எழுத்துபூா்வ வலியுறுத்தல்களை முன்வைக்க வேண்டிய ஜி4 நாடுகளின் கடமை குறித்து ஆலோசிக்கப்பட்டது. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினராக ஜி4 நாடுகள் ஒருவரை ஒருவா் ஆதரிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது’ என்று குறிப்பிட்டாா்.