எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

பிரபல யூ-டியூபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!

ஆந்திரத்தில் பிரபல யூ-டியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image
ஹர்ஷா சாய்- படம் | இன்ஸ்டா
Updated On :25 செப்டம்பர் 2024, 7:07 am

DIN

ஆந்திரத்தில் பிரபல யூ-டியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரம், தெலங்கானா மட்டுமின்றி தமிழகத்திலும் புகழ்பெற்ற யூடியூபர் ஹர்ஷா சாய். ஹர்ஷா சாய் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வது போல விடியோக்கள் வெளியிட்டு பிரபலமானவர். இவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் யூடியூப் சேனல்கள் உள்ளன. தமிழ் யூடியூப் சேனலில் மட்டும் 85 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான பின் தொடர்பவர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நார்சிங்கி காவல் நிலையத்தில் பெண் நடிகை ஒருவர், ஹர்ஷா சாய் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் 25 வயதான நடிகையை யூ-டியூபர் ஹர்ஷா சாய், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் அந்தப் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள், விடியோக்களை வைத்து மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரளித்தப் பெண் மும்பையில் வசித்து வருகிறார். இவர் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த வருடம் யூ-டியூபரான ஹர்ஷா சாயுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்துள்ளார். பெண் நடிகைக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றதாகவும், இன்னும் ஹர்ஷா சாய் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பெண் நடிகை கூறுகையில், “இருவரும் நண்பர்கள் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் முதல் முறையாக சந்தித்து காதலித்து வந்துள்ளனர். மேலும், அந்த நடிகையை திருமணம் செய்வதாகக்கூறி ஹர்ஷா சாய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரது நிர்வாணப் புகைப்படங்களை வைத்து மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாகவும்” தெரிவித்துள்ளார்.

ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை, பெண்களை நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் எடுத்து மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.