அமோனியா கசிவு: கைதான 3 பேருக்கும் 15 நாள்கள் நீதிமன்றக் காவல் - நீதிமன்றம் உத்தரவுஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 8 ஆக உயர்வு!தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

பிரபல யூ-டியூபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு!

ஆந்திரத்தில் பிரபல யூ-டியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

ஹர்ஷா சாய் - படம் | இன்ஸ்டா

Updated On :25 செப்டம்பர் 2024, 12:37 pm IST

ஆந்திரத்தில் பிரபல யூ-டியூபரான ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆந்திரம், தெலங்கானா மட்டுமின்றி தமிழகத்திலும் புகழ்பெற்ற யூடியூபர் ஹர்ஷா சாய். ஹர்ஷா சாய் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்வது போல விடியோக்கள் வெளியிட்டு பிரபலமானவர். இவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளிலும் யூடியூப் சேனல்கள் உள்ளன. தமிழ் யூடியூப் சேனலில் மட்டும் 85 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைப்பர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் இவருக்கு 1 கோடியே 40 லட்சத்துக்கும் அதிகமான பின் தொடர்பவர்களும் உள்ளனர்.

இந்த நிலையில், ஆந்திர மாநிலம் ஹைதராபாத் நார்சிங்கி காவல் நிலையத்தில் பெண் நடிகை ஒருவர், ஹர்ஷா சாய் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறி புகார் அளித்துள்ளார்.

அந்தப் புகாரில் 25 வயதான நடிகையை யூ-டியூபர் ஹர்ஷா சாய், பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் பின்னர் அந்தப் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்கள், விடியோக்களை வைத்து மிரட்டியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகாரளித்தப் பெண் மும்பையில் வசித்து வருகிறார். இவர் பிக்பாஸ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுள்ளார். இவர் கடந்த வருடம் யூ-டியூபரான ஹர்ஷா சாயுடன் இணைந்து ஒரு படத்திலும் நடித்துள்ளார். பெண் நடிகைக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்றதாகவும், இன்னும் ஹர்ஷா சாய் கைது செய்யப்படவில்லை என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அந்தப் பெண் நடிகை கூறுகையில், “இருவரும் நண்பர்கள் நடத்திய ஒரு நிகழ்ச்சியில் முதல் முறையாக சந்தித்து காதலித்து வந்துள்ளனர். மேலும், அந்த நடிகையை திருமணம் செய்வதாகக்கூறி ஹர்ஷா சாய் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்னர் அவரது நிர்வாணப் புகைப்படங்களை வைத்து மிரட்டி அவரிடம் இருந்து ரூ.2 கோடி கேட்டு மிரட்டியதாகவும்” தெரிவித்துள்ளார்.

ஹர்ஷா சாய் மீது பாலியல் வன்கொடுமை, பெண்களை நிர்வாணமாக புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் எடுத்து மிரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.