திறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் பைக்! விரைவில் அறிமுகம்...

2025ல் ஹோண்டா ஆக்டிவா எலெக்ட்ரிக் பைக் அறிமுகம்..விலை, அம்சங்கள் என்னென்ன?

dotcom

Published On :

ஆட்டோமொபைல் நிறுவனங்களில் முன்னணி நிறுவனமான ஹோண்டா, புதிய எலெக்ட்ரிக் பைக்கை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இரு சக்கர வாகன விற்பனையில் ஹோண்டா நிறுவனம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வருகிறது. அதிலும் ஹோண்டா ஆக்டிவா பைக் டாப் 5 விற்பனையில் ஒன்றாக இருக்கிறது. ஆண், பெண் இரு தரப்பினருக்கும் பொதுவான பைக்காக இருப்பதால் வாடிக்கையாளர்களின் விருப்பமாக உள்ளது.

இந்நிலையில் தற்போது மின் வாகனங்கள் உற்பத்தி அதிகரித்து வரும் நிலையில், ஹோண்டா நிறுவனம் விரைவில் மின் வாகனத்தை அறிமுகப்படுத்துகிறது.

ஹோண்டா ஆக்டிவா பெயரிலேயே அறிமுகமாகும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர், டிஜிட்டல் மீட்டர், ப்ளூடூத், எல்இடி விளக்குகள், டிஸ்க் பிரேக் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

ஒருமுறை பேட்டரி சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 1500 கிமீ வரை செல்லும் அளவில் வடிவமைக்கப்படவுள்ளது.

இதற்கான தயாரிப்பு இந்தாண்டு இறுதியில் தொடங்கும் என்றும் 2025 மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்படலாம் என்று தெரிகிறது.

இதன் விலை ஒரு லட்சம் ரூபாய் முதல் ரூ. 1.20 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹோண்டா ஆக்டிவா மட்டும் இதுவரை 3 கோடி பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது.

இதன் விலை ரூ. 1.05 லட்சம் முதல் ரூ. 1.12 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.