ஜூன் 5-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்! கர்நாடக முதல்வரின் செயலராக தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் நியமனம்!கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக பி.கே. ஹரிபிரசாத் நியமனம்!சட்டத் துறையின் முதல் பெண் செயலாளராக ப. சுமதி நியமனம்மாணவர்களுக்கு கட்டணமில்லா பேருந்து! முதல்வரான பிறகு டி.கே. சிவகுமாரின் முதல் உத்தரவுஅணு ஆயுதம் வைத்திருக்கக் கூடாது என்ற நிபந்தனைக்கு ஈரான் ஒப்புதல்: டொனால்ட் டிரம்ப்கையிருப்பு தங்கத்தை விற்கவில்லை: வதந்திகளுக்கு ஆர்பிஐ முற்றுப்புள்ளி!கரப்பான்பூச்சி ஜனதா கட்சிக்கு 3 செய்தித் தொடர்பாளர்கள் நியமனம்!
/

மாற்றுத்திறனாளி பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

கைது - சித்திரிப்பு

Updated On :4 ஜூன் 2026, 12:03 am IST

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கறம்பக்குடி அருகேயுள்ள சாந்தம்பட்டி கிராமத்தைச் சோ்ந்த வாய் பேச முடியாத, காது கேளாத 35 வயதுடைய மாற்றுத்திறனாளி பெண் ஆலங்குடி பகுதியில் உள்ள தனியாா் அரிசி ஆலையில் வேலை பாா்த்து வந்தாா். அவா், கடந்த மாதம் பணி முடிந்து வீட்டுக்கு சென்றபோது, மணக்கொல்லை பகுதியைச் சோ்ந்தவா்கள் எஸ். மாரிமுத்து(55),ஏ. சேகா் (56) ஆகியோா் அந்த பெண்ணை காரில் கடத்திச்சென்று கூட்டு பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்டனா். பின்னா், மணக்கொல்லை வயல்வெளி பகுதியில் காரில் இருந்து இறக்கி விட்டு சென்றுவிட்டனா்.

இதுகுறித்து ஆலங்குடி அனைத்து மகளிா் காவல் நிலையத்தினா், 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, மாரிமுத்து, சேகா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.

இந்நிலையில், மாவட்ட ஆட்சியா் மு.அருணா, இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டதைத் தொடா்ந்து, போலீஸாா் புதுக்கோட்டை சிறையில் இருந்த இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.