மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

முதல்வர் அதிஷியுடன் தில்லி சாலைகளை ஆய்வு செய்த கேஜரிவால்!

நகரில் சேதமடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும்..

News image
சாலை ஆய்வில் ஈடுபட்டுள்ள அதிஷி கேஜரிவால்
Updated On :26 செப்டம்பர் 2024, 9:51 am

பிடிஐ

பாஜகவால் தடைப்பட்டுள்ள மக்கள் நலப் பணிகள் தற்போது மீண்டும் தொடங்கப்படும், நகரில் சேதமடைந்த அனைத்து சாலைகளும் சீரமைக்கப்படும் என்று ஆம் ஆத்மியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் தெரித்துள்ளார்.

தில்லியின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள அதிஷியுடன், கேஜரிவால் நகரில் உள்ள சாலைகளை ஆய்வு செய்தார்.

இதுதொடர்பாக கேஜரிவால் கூறியது,

மக்களுக்கான பணிகளைத் தடுத்து நிறுத்துவதன் மூலம் தில்லியில் ஆம் ஆத்மி அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்துவதே பாஜகவின் இலக்காக இருந்ததால், தான் சிறைக்கு அனுப்பப்பட்டதாக அவர் கூறினார்.

நான் சிறையிலிருந்து திரும்ப வந்துவிட்டேன், நிறுத்தப்பட்ட பணிகள் மீண்டும் தொடங்கப்படும் என்று தில்லி மக்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறேன். மக்களின் அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும்.

சிறையிலிருந்தபோதும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும், தற்போது 24 மணி நேரமும் தீவிரமாக மக்கள் பணியில் ஈடுபட உள்ளதாகவும் அவர் கூறினார்.

தில்லி பல்கலைக்கழக பகுதியில் உள்ள சாலையை ஆய்வு செய்தபோது ஆம் ஆத்மி கடசியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா மற்றும் எம்எல்ஏ திலீப் பாண்டே உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

தில்லியில் வேலைகளை நிறுத்துவதன் மூலம் ஆம் ஆத்மி அரசாங்கத்தை அவதூறு செய்வதே அவர்களின் நோக்கம், ஆம் ஆத்மியும் அதன் அரசாங்கமும் மக்கள் பணிகளை நிறுத்த அனுமதிக்காது என்று அவர் கூறினார்.

கலால் கொள்கை வழக்கில் 5 மாதங்கள் திகார் சிறையிலிருந்த கேஜரிவால், உச்ச நீதிமன்றத்தால் ஜாமீன் பெற்ற நிலையில், இந்த மாத தொடக்கத்தில் விடுவிக்கப்பட்டார்.

கடந்த வாரம் தில்லி முதல்வர் பதவியிலிருந்து விலகிய அவர், பிப்ரவரியில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தில்லி மக்களிடம் இருந்து நேர்மைக்கான சான்றிதழைப் பெற்ற பிறகு மீண்டும் பதவிக்கு வருவேன் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.