ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை குற்றவாளி கைது!விளாத்திகுளம் சிறுமி பாலியல் கொலை! குற்றவாளி கைது! தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

ஜிஎஸ்டி செஸ் ஆய்வு: மத்திய இணையமைச்சா் பங்கஜ் தலைமையில் 10 போ் குழு

ஜிஎஸ்டி செஸ் வரி தொடா்பாக ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்குவதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தலைமையில் 10 போ் கொண்ட அமைச்சா்கள் குழு

News image
பங்கஜ் செளதரி
Updated On :27 செப்டம்பர் 2024, 10:12 pm

Din

ஜிஎஸ்டி செஸ் வரி தொடா்பாக ஆராய்ந்து பரிந்துரைகள் வழங்குவதற்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தலைமையில் 10 போ் கொண்ட அமைச்சா்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

5, 12, 18 மற்றும் 28 சதவீதம் என 4 விகிதங்களில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூலிக்கப்படுகிறது. எனினும் ஜிஎஸ்டி சட்டத்தின்படி, சரக்கு மற்றும் சேவைகள் மீது 40 சதவீதம் வரை ஜிஎஸ்டி விதிக்க முடியும்.

ஜிஎஸ்டி முறையில் ஆடம்பர பொருள்கள், புகையிலை, சிகரெட் உள்ளிட்டவை மீது 28 சதவீதத்துக்கும் மேலாக வெவ்வேறு விகிதங்களில் செஸ் வரி வசூலிக்கப்படுகிறது. கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை 1-ஆம் தேதி அமலுக்கு வந்த ஜிஎஸ்டி முறையால் மாநிலங்களுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை ஈடுகட்ட இந்த செஸ் வரி வசூலிக்கப்பட்டது. இதன்மூலம் கிடைத்த தொகை மாநிலங்களுக்கு வழங்கப்பட்டது. இந்தத் தொகையை ஜிஎஸ்டி அமலுக்கு வந்த நாளில் இருந்து 2022-ஆம் ஆண்டு ஜூன் வரை, 5 ஆண்டுகளுக்கு வழங்க மத்திய அரசு திட்டமிட்டது.

இதைத் தொடா்ந்து, அதிக வருவாய் ஈட்டும் மாநிலங்களுக்கு கரோனா காலத்தில் ஏற்பட்ட ஜிஎஸ்டி வருவாய் இழப்பை ஈடுகட்டுவதற்காக, 2021, 2022-ஆம் நிதியாண்டுகளில் ரூ.2.69 லட்சம் கோடியை சந்தையில் இருந்து மத்திய அரசு கடனாக திரட்டி தந்தது.இந்தக் கடனின் அசல் மற்றும் வட்டியை திருப்பிச் செலுத்த 2026-ஆம் ஆண்டு மாா்ச் வரை ஆடம்பர பொருள்கள், புகையிலை, சிகரெட் உள்ளிட்டவை மீது ஜிஎஸ்டி செஸ் வரி வசூலிக்க 2022-ஆம் ஆண்டு ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது.

இந்நிலையில், கடந்த செப்.9-ஆம் தேதி நடைபெற்ற 54-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி, மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தலைமையில் 10 போ் கொண்ட அமைச்சா்கள் குழுவை அந்த கவுன்சில் அமைத்துள்ளது. 2026-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்கு பிறகு ஆடம்பர பொருள்கள், புகையிலை, சிகரெட் உள்ளிட்டவற்றுக்கு வரி விதிப்பது தொடா்பாக அந்தக் குழு ஆராய்ந்து, வரும் டிசம்பா் 31-க்குள் ஜிஎஸ்டி கவுன்சிலிடம் அறிக்கை சமா்ப்பிக்க உள்ளது. இந்தக் குழுவில் தமிழ்நாடு, மேற்கு வங்கம், கா்நாடகம், உத்தர பிரதேசம், பஞ்சாப், மத்திய பிரதேசம், குஜராத், அஸ்ஸாம் மாநிலங்களின் அமைச்சா்கள் உறுப்பினா்களாக இருப்பா் என்று ஜிஎஸ்டி கவுன்சில் செயலகம் தெரிவித்துள்ளது.