மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தீபாவளிக்குள் பள்ளமில்லாத சாலைகள்: முதல்வர் அதிஷி!

போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளைத் தொடர அதிகாரிகளுக்கு உத்தரவு..

News image
முதல்வர் அதிஷி
Updated On :30 செப்டம்பர் 2024, 6:31 am

பிடிஐ

தீபாவளிக்குள் தலைநகர் தில்லியில் பள்ளமில்லாத சாலைகளாக உருவாக்க வேண்டும் அதிகாரிகளுக்கு அந்த மாநில முதல்வர் அதிஷி உத்தரவிட்டுள்ளார்.

அதிஷி தலைமையிலான அமைச்சர்கள் திங்கள்கிழமை காலை பொதுப்பணித்துறை பொறியாளர்களுடன் தெற்கு மற்றும் தென்கிழக்கு தில்லியில் பல்வேறு பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை ஆய்வு மேற்கொண்டனர்.

இதுதொடர்பாக முதல்வர் வெளியட்ட எக்ஸ் பதிவில்,

தில்லியில் உள்ள சாலைகள் அனைத்தும் சீரமைக்கும் பணியில் மாநில முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் என்எஸ்ஐசி ஓக்லா, மோமி மில் மேல்பாலம், சிராக் தில்லி, துகலகாபாத், மதுரா சாலை, ஆசிரம் சௌக் மற்றும் சுரங்கப்பாதை உள்ளிட்ட பழுதடைந்த சாலைகளை இன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சாலைகளில் ஏற்பட்டுள்ள பள்ளங்களால் மக்கள் மிகுந்த சிரமமடைந்துள்ளனர்.

தில்லி சாலைகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர்

தில்லி சாலைகளை ஆய்வு மேற்கொண்ட முதல்வர்

போர்க்கால அடிப்படையில் சீரமைப்புப் பணிகளைத் தொடங்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அரவிந்த் கேஜரிவாலின் வழிகாட்டுதலின்படி தீபாவளிக்குள் பள்ளமில்லாத சாலைகளை உருவாக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம்.

கிழக்கு தில்லியில் உள்ள சாலைகளை அமைச்சர் சௌரப் பரத்வாஜ் மற்றும் முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

இதுதொடர்பாக சிசோடியாவின் எக்ஸ் பதிவில்,

தில்லி மக்களுக்காக ஆம் ஆத்மி அரசு செய்துவரும் பணிகளை முடக்க பாஜக தன்னையும், முன்னாள் முதல்வர் கேஜரிவாலையும் போலி வழக்குகளில் சிறைக்கு அனுப்பியது. இதனால் தலைநகரில் சரியான சாலைகள் கூட இல்லாமல் மக்கள் அவதிக்குள்ளானர்.

அமைச்சர்கள் கோபால் ராய், கைலாஷ் கெஹ்லோட், இம்ரான் உசேன், முகேஷ் அஹ்லாவத் ஆகியோரும் சாலைகளை ஆய்வு செய்தனர்.

பழுதடைந்த சாலைகளில் ஆய்வு

பழுதடைந்த சாலைகளில் ஆய்வு

முன்னதாக ஞாயிறன்று நகரத்தில் உள்ள சாலைகளின் நிலையை மதிப்பாய்வு செய்ய ஒரு கூட்டத்தை நடத்தினார், மேலும் அனைத்து அமைச்சர்களும் ஒரு வாரத்திற்குள் நியமிக்கப்பட்ட பகுதிகளில் பழுதுபார்க்கும் சாலைகளை ஆய்வு செய்வார்கள்.

ஆய்வுக்குப்பின், சீரமைப்பு பணிகள் துவங்கி அக்டோபர் இறுதிக்குள் குண்டும் குழியில்லாத சாலைகளாக மாற்றப்படும் என்று அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.