மக்களவையில் 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால நிதி அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார்.
இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு நிதி அறிக்கை ஜூலை மாதத்தில் தாக்கல் செய்யும்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்தியப் பொருளாதாரம் மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. அனைத்து தரப்பு மக்களுக்கும் நலத்திட்டங்கள் செயல்படுகின்றன.
பிரதமர் மோடியின் பல்வேறு திட்டங்களால் நாடு மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டுள்ளது. எங்கள் வளர்ச்சிப் பணிகளுக்காக மக்கள் எங்களை மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்த்துவர் என்று நம்பிக்கை உள்ளது.
நாட்டில் 4 பிரிவினருக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. ஊழல் ஒழிப்பையும் வாரிசு அரசியலையும் எதிர்த்து பணியாற்றி வருகிறோம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு, அனைவருக்கும் சமையல் எரிவாயு என்ற நிலையை எட்டியுள்ளோம். வீடுகளுக்குக் குடிநீர் அனைவருக்கும் வீடு, குறைந்த விலையில் கேஸ் சிலிண்டர் என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.
சமூகநீதி என்பதைத் திட்டங்களுக்கான மந்திரமாகப் பயன்படுத்துகிறோம் என்று அவர் தெரிவித்தார்.