நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் 15 குழந்தைகள் பிறந்தன!

மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் பதினைந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 

News image

ராமர் சிலை பிரதிஷ்டை நாளில் பிறந்த 15 குழந்தைகள்

Updated On :22 ஜனவரி 2024, 12:08 pm

DIN

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டதை நாடு முழுவதும் கொண்டாடிய நிலையில், மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் பதினைந்து குழந்தைகள் பிறந்துள்ளன. 

அரசு நடத்தும் எம்டிஎச் மருத்துவமனையில் 11 குழந்தைகள் சாதாரண பிரசவத்தின் மூலமும், மூன்று குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்ததாகவும் மூத்த மருத்துவ நிபுணர் டாக்டர் சுமித்ரா யாதவ் தெரிவித்தார். 

இன்று பிறந்த அனைத்து குழந்தைகளும் நன்றாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தெபல்பூர் சிவில் மருத்துவமனையில் சிசேரியன் மூலம் பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. 

அயோத்தியில் ராமர் சிலை பிரதிஷ்டை தினமான இன்று(ஜனவரி 22) பல கர்ப்பிணிப் பெண்கள் குழந்தையைப் பெற்றெடுக்க முயன்றதாக அரசு மருத்துவ அதிகாரி ஒருவர் கூறினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.