பெட்ரோல், டீசல் விலை உயர்வு! கேள்விக்குறியாகும் சாமானிய மக்கள் வாழ்வாதாரம்: ஸ்டாலின் தேர்தல் புகார்கள்! வாக்குப்பதிவு எந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்படும்: அர்ச்சனா பட்நாயக்‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!
/

ஜம்மு எல்லைக்குள் அத்துமீறி ஊடுருவியவர் சுட்டுக் கொலை!

ஜம்மு எல்லையில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக் கொலை

News image

பிரதிப் படம் - PTI

Updated On :5 ஏப்ரல் 2025, 10:20 am IST

ஜம்மு எல்லையில் அத்துமீறி நுழைந்ததாகக் கூறி, பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரை சுட்டுக் கொல்லப்பட்டதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறினர்.

ஜம்மு எல்லையில், ஏப்ரல் 4 ஆம் தேதி நள்ளிரவில் எல்லை புறக்காவல் நிலையமான அப்துலியனில் ஒருவர் ஊடுருவியதாக எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி கூறினார்.

ஊடுருவிய நபரை தடுக்க முயன்ற அதிகாரியின் ஆணையை ஏற்க மறுத்து, தொடர்ந்து ஊடுருவ முயற்சித்ததால், பாதுகாப்பு அச்சுறுத்தலைக் கருத்தில்கொண்டு, ஊடுருவியரை பாதுகாப்பு அதிகாரிகள் சுட்டுக் கொன்றனர்.

அத்துமீறி, எல்லைக்குள் ஊடுருவியவரின் அடையாளம் மற்றும் ஊடுருவியதன் நோக்கம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் கூறினர். மேலும், அவரது உடலை உடற்கூறாய்வுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.