உலகப் புகழ்ùபற்ற மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு பிரிட்டனில் 'ஃபிரெட்டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருது வழங்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள டார்செட் மாவட்டத்தின் வேமத் பகுதியில் "2025, சர்வதேச மணல் சிற்பத் திருவிழா' சனிக்கிழமை தொடங்கியது. இதில் இந்தியாவைச் சேர்ந்ச பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் பங்கேற்று, 10 அடி உயரத்திலான விநாயகர் மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார்.
இந்தத் திருவிழாவில் சுதர்சன் பட்நாயக்கிற்கு "ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருது வழங்கப்பட்டுள்ளது. பிரிட்டனைச் சேர்ந்த மூத்த மணல் சிற்பக் கலைஞர் ஃபிரெட் டாரிங்டனின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில் சுதர்சன் பட்நாயக் இவ்விருதைப் பெறும் முதல் இந்தியர் என்னும் பெருமையைப் பெற்றுள்ளார்.

இது தொடர்பாக சுதர்சன் பட்நாயக் கூறியதாவது:
"ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருதைப் பெறும் முதல் இந்தியராக இருப்பதற்காக நான் பெருமிதம் கொள்கிúறன்.
உலக அமைதி என்ற செய்தியுடன் நான் அமைத்த விநாயகர் சிலைக்கு மரியாதை அளிக்கும் வகையில் இவ்விருது எனக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
சுதர்சன் பட்நாயக்கிற்கு இவ்விருதை வேமத் நகர மேயர் ஜோன் ஓரெல் வழங்கினார். விருது வழங்கும் விழாவில் "சாண்ட் வேர்ல்டு' அமைப்பின் இயக்குநர் மார்க் ஆண்டர்சன், அதன் இணை நிறுவனர் டேவிட் ஹிக்ஸ், பிரிட்டனின் கலாசாரத் துறை அமைச்சர் நௌரேம் ஜே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பத்மஸ்ரீ விருது பெற்றுள்ள சுதர்சன் பட்நாயக், 65-க்கும் மேற்பட்ட சர்வதேச மணல் சிற்பத் திருவிழாக்களில் பங்கேற்று விருதுகளைப் பெற்றுள்ளார். இந்நிலையில், பிரிட்டனில் "ஃபிரெட் டாரிங்டன் சாண்ட் மாஸ்டர்' விருதைப் பெற்றதற்காக சுதர்சன் பட்நாயக்கிற்கு அவரது சொந்த மாநிலமான ஒடிஸாவின் முதல்வர் மோகன் சரண் மாஜீ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம்

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு ஆகஸ்ட் முதல் தற்காப்பு கலை பயிற்சி வகுப்பு: வழிகாட்டுதல்கள் வெளியீடு

கலை, கல்வியியல் கல்லூரி ஆசிரியா்கள் பணியிடமாறுதல் கலந்தாய்வு விண்ணப்ப பதிவு தொடக்கம்

கொடைக்கானல் சுழல் சங்கம் சாா்பில் விருது வழங்கும் விழா
விடியோக்கள்

கட்சிக்காரர்களை வைத்து கம்பெனி நடத்துகிறார் EPS! செங்கோட்டையன் பேச்சு | TVK | ADMK

Journalist Durai karuna Interview | அதிமுகவும் ஆதவ் அர்ஜுனா கணக்கும் | CM Vijay | TVK | ADMK



