மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஆந்திரம்: 17 மண்டலங்களில் இன்று வெப்ப அலை எச்சரிக்கை!

17 மண்டலங்களில் வெப்ப அலை எச்சரிக்கை..

News image
வெப்ப அலை- Center-Center-Bhubaneswar
Updated On :10 ஏப்ரல் 2025, 6:36 am

DIN

ஆந்திரத்தில் இன்று 17 மண்டலங்களில் வெப்ப அலை வீசும் என்று அம்மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

17 மண்டலங்களில், கிருஷ்ணா மாவட்டத்தில் 6, என்டிஆர்..யில் 4, பார்வதிபுரம் மான்யம், குண்டூர் மற்றும் பல்நாடு ஆகிய இடங்களில் தலா 2, எலூருவில் ஒரு மண்டலமும் வெப்ப அலைகளால் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பேரிடர் மேலாண்மை ஆணைத்தின் நிர்வாக இயக்குநர் கூர்மநாத் கூறுகையில்,

வெய்யில் ஒரேபக்கம் என்றால், வெப்பச்சலனம் காரணம் பார்வதிபுரம் மான்யம், அல்லூரி சீதாராமராஜு, அனகப்பள்ளி, கிழக்கு கோதாவரி உள்ளிட்ட 13 மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.

மத்திய இந்தியாவில் மேற்பரப்பு சுழற்சி காரணமாக இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய பிற மாவட்டங்கள்: கோனசீமா, காக்கிநாடா, எலூரு, என்டிஆர், குண்டூர், பிரகாசம், நந்தியால், அனந்தபூர் மற்றும் ஸ்ரீ சத்ய சாய், செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

அதிகபட்சமாக கர்னூல் மாவட்டம் உலிந்தகொண்டாவில் 40.8 டிகிரி செல்சியஸ், பிரகாசம் மாவட்டம் தரிமதுகாவில் 40.3 டிகிரி செல்சியஸ், சித்தூர் மாவட்டம் கூர்மநாத் மாவட்டம் தவணாம்பள்ளியில் 40.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தரிமதுகா (பிரகாசம்), எர்ரம்பேட்டை (அள்ளூரி சீதாராமராஜு), தவணாம்பள்ளே (சித்தூர்) ஆகிய 25 இடங்களில் புதன்கிழமை 40 டிகிரி செல்சியஸைத் தாண்டி அதிக வெப்பநிலை பதிவாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.