இதைத்தொடா்ந்து தில்லி உயா்நீதிமன்றத்தில் காா்த்தி சிதம்பரம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், ‘ஏா்செல்-மேக்சிஸ் ஒப்பந்தம், சீனா்களுக்கு விசா தொடா்பான சிபிஐ வழக்குகளில் நான் நிரபராதி என்று விடுவிக்கப்பட்டால், அதுசாா்ந்த அமலாக்கத் துறை வழக்குகளை விசாரிக்க முடியாது. அந்த வழக்குகள் பயனற்ாகிவிடும். எனவே சிபிஐ பதிவு செய்துள்ள வழக்குகளில் குற்றச்சாட்டுகள் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படும் வரை, அதுதொடா்பாக அமலாக்கத் துறையின் பண முறைகேடு வழக்குகளில் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்படுவதை ஒத்திவைக்க வேண்டும்’ என்று கோரினாா்.