விராலிமலை தொகுதி காலியானதாக அறிவிப்பு! 6 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்!4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

நாக்பூர்: பெண் மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு

நாக்பூரில் பெண் மருத்துவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

News image

திருமணம் - கோப்புப்படம்.

Updated On :13 ஏப்ரல் 2025, 2:34 pm IST

நாக்பூரில் பெண் மருத்துவரை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்த ஐபிஎஸ் அதிகாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள இமாம்வாடா காவல் நிலையத்தில் 28 வயது பெண் மருத்துவர் வெள்ளிக்கிழமை புகார் ஒன்றை அளித்தார். அதில், தனக்கும் ஐபிஎஸ் அதிகாரிக்கும் சமூக ஊடகத் தளமான இன்ஸ்டா மூலம் கடந்த 2022ஆம் ஆண்டு நட்பு ஏற்பட்டது. அப்போது அவர் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகி வந்தார்.

அதே நேரத்தில் தான் எம்பிபிஎஸ் படிப்பை தொடர்ந்து வந்தேன். பின்னர் எங்களின் ஆன்லைன் உரையாடல்கள் விரைவில் தொலைபேசி அழைப்புகளாக மாறியது. நண்பர்களான பிறகு, குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து தன்னுடன் உடல் உறவில் ஈடுபட்டார்.

ஆனால் ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றவுடன் அவர் தன்னை தவிர்க்கத் தொடங்கினார்.

மேலும் தன்னை திருமணம் செய்து கொள்ளவும் மறுத்துவிட்டார். அந்த அதிகாரியின் குடும்பத்தினரும் தனக்கு பதிலளிக்கவில்லை. இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் வருத்தமடைந்த அந்த மருத்துவர் இமாம்வாடா காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

அவரது புகாரின் அடிப்படையில், சனிக்கிழமை ஐபிஎஸ் அதிகாரி மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக அவர்கள் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.