நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 56% ஆக உள்ள நிலையில், தமிழ்நாட்டில் முதியோர் வளர்ச்சி விகிதம் 71.17%: நிதியமைச்சர்நலத்திட்டங்களால் ஆண்டுக்கு ரூ. 25,000 கோடி செலவினமாகிறது: நிதியமைச்சர்நிதி பற்றாக்குறையில் பஞ்சாப், கேரளத்துக்கு இணையாக தமிழ்நாடு உள்ளது: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டிற்கு ரூ. 78, 326 கோடி வருவாய் பற்றாக்குறை: நிதியமைச்சர் மரிய வில்சன்தமிழ்நாட்டு அரசுக்கு ரூ. 10 லட்சம் கோடி கடன் நிலுவையில் உள்ளது: மரிய வில்சன்தமிழ்நாட்டு வரி வருவாய் வரலாறு காணாத வீழ்ச்சி: நிதியமைச்சர்முதல்வர் விஜய் வெற்றிக்கு எதிராக திமுக வேட்பாளர் வழக்கு!ஆண்டுதோறும் மின்கட்டண உயர்வு என்பது வழக்கமான ஒன்றாக மாறிவிட்டது: அமைச்சர் நிர்மல் குமார்மின் கட்டமைப்பை வலுப்படுத்த ரூ. 15,032 கோடி! 15,058 ஊழியர்களை நியமிக்க உத்தரவு!அதிமுக எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் சி. விஜயபாஸ்கர்!அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! மருத்துவரின் மருந்து சீட்டு இல்லாமல் இருமல் மருந்து விற்கத் தடை!நடிகர் ரஜினியுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! ரூ. 75,000 வரை பயிர்க்கடன் முழுவதும் தள்ளுபடி! - முதல்வர் விஜய்நீட் மறுதேர்வை முன்னிட்டு டெலிகிராம் செயலிக்கு தடை! மத்திய அரசு
/

இரண்டு குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொன்று தாய் தற்கொலை!

இரண்டு குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொன்ற தாய் பற்றி...

News image

கோப்புப் படம்.

Updated On :18 ஏப்ரல் 2025, 10:24 am IST

தெலங்கானாவில் இரண்டு குழந்தைகளைக் கத்தியால் குத்திக் கொலை செய்த தாய், ஆறாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஹைதராபாத் புறநகர் கஜுலராமரம் பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் தேஜா (வயது 35) என்ற பெண், அவரது கணவர் மற்றும் இரண்டு மகன்களுடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் 11 வயது மகன் அர்ஷித் ரெட்டி மற்றும் 6 வயது மகன் ஆஷிஷ் ரெட்டியைக் கத்தியால் குத்தி தேஜா கொலை செய்துள்ளார்.

தொடர்ந்து, குடியிருப்பின் ஆறாவது மாடியில் இருந்து குதித்து அவரும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவத்தில் மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில், தேஜா மற்றும் குழந்தைகள் உடல்நலப் பிரச்னை காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டிருக்கலாம். தேஜா மனநிலை சரியில்லாமல் இருந்ததாகவும் கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது எனத் தெரிவித்துள்ளனர்.

மேலும், வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் உடல்களைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.