ராஞ்சி: ஜாா்க்கண்ட் மாநிலம் பொக்காரோ மாவட்டத்தில் 8 நக்ஸல்கள் திங்கள்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனா்.
இதுதொடா்பாக மாநில காவல் துறை டிஜிபி அநுராக் குப்தா உள்ளிட்ட அதிகாரிகள் கூறியதாவது: பொக்காரோ மாவட்டம் லால்பானியா பகுதியில் சிஆா்பிஎஃப் படையின் கோப்ரா கமாண்டோ படையினா், மாநில காவல் துறையினா் இணைந்து நக்ஸல் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனா்.
அப்போது லுகு குன்றுகளில் இருந்த நக்ஸல்கள், கோப்ரா படையினா் மற்றும் காவல் துறையினருடன் மோதலில் ஈடுபட்டனா். இருதரப்பினருக்கும் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் 8 நக்ஸல்கள் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
கொல்லப்பட்ட நக்ஸல்களில் விவேக் என்பவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.1 கோடி, அரவிந்த் யாதவ் என்பவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.25 லட்சம், சாஹேப்ராம் மாஜி என்பவா் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதி அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து ஏ.கே. ரக துப்பாக்கி, மூன்று ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கி, 8 நாட்டுத் துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
தற்போது நடைபெற்ற நக்ஸல்கள் என்கவுன்ட்டா் மூலம், பொக்காரோ உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய வடக்கு சோட்டாநாக்பூா் மண்டலத்தில் நக்ஸல்கள் முழுமையாக ஒழிக்கப்பட்டுள்ளனா்’ என்று தெரிவித்தனா்.
தொடர்புடையது
ஜாா்க்கண்ட் கலால் காவல் துறை தோ்வின் வினாத்தாள் கசிவு: 159 தோ்வா்கள் கைது

துரந்தரில் சாரா அர்ஜுன் எப்படி தேர்வானார்?

கர டிரைலர் எப்போது?

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக் கொலை! தேடுதல் வேட்டை தீவிரம்!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை


