சத்தீஸ்கர் மாநிலத்தில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
சத்தீஸ்கரில் யுபிஎஸ்சி முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெறும் நபர்களுக்கு மேயர் நிதியிலிருந்து ரூ.1 லட்சம் வழங்க அம்மாநிலத்திலுள்ள அனைத்து நகராட்சி ஆணையர்களுக்கும் முதல்வர் விஷ்ணு தியோ சாய்யின் அறுவுறுத்தலின்படி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னதாக, 2024-ம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி தேர்வில் சத்தீஸ்கரைச் சேர்ந்த 5 தேர்வர்கள் தேர்ச்சிப் பெற்று வெற்றியடைந்துள்ளனர்.
அதில், ராய்ப்பூரைச் சேர்ந்த பூர்வா அகர்வால் (65வது இடம்), முங்கேலியின் அர்பன் சோப்ரா (313 வது இடம்), ஜக்தாபூரின் மான்சி ஜெயின் (444வது இடம்), அமிபிகாபூரின் கேஷவ் கார்க் (496வது இடம்) மற்றும் சாச்சி ஜெய்ஸ்வால் (654 வது இடம்) ஆகியோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இதுகுறித்து வெளியான அறிக்கையில், மேல் கூறப்பட்டுள்ள தேர்வர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டு, இளம் தலைமுறையினரை ஊக்குவிக்கும் முயற்சியாக யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சிப் பெறும் தேர்வர்களுக்கு ரூ.1 லட்சம் ஊக்கத் தொகை வழங்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மத்திய வருமான வரித் துறை முதன்மைத் தலைமை ஆணையர் பொறுப்பேற்பு
'நீங்கள்தான் ஹீரோ, வீட்டையும் கவனித்துக்கொள்ளுங்கள்' - யுபிஎஸ்சி வெற்றியாளர்களுக்கு முதல்வர் அறிவுரை!
'நான் முதல்வன் திட்டம் உதவியது' - யுபிஎஸ்சி தேர்வில் வென்ற காஞ்சிபுரம் கிருபாகரன்!
மதுரை டூ மத்திய அரசு: யுபிஎஸ்சி தேர்வில் வாடிப்பட்டி ராஜேஸ்வரி இரண்டாமிடம்! இது முதல் சாதனை அல்ல..
வீடியோக்கள்
திமுக கூட்டணி கட்சிகள் தவெகவிற்கு ஆதரவு தருமா? - வைகோ பேட்டி | TVK | Vijay | Vaiko
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் vs உதயநிதி: மாறிய களம் | TVK Vijay |
இணையதளச் செய்திப் பிரிவு

இந்தியா எதிர்பார்க்காத வரலாறு! வெற்றிக்குப் பின் ஆதவ் அர்ஜுனா பேட்டி! | TVK | Election result
இணையதளச் செய்திப் பிரிவு

கிளாடியேட்டர்ஸ் அறிமுக விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு


