நீட் முதல் முதுநிலை மருத்துவப் படிப்பு வரை மன அழுத்தங்கள் உண்டு, மனவலிமை அவசியம்: அமைச்சர் அருண்ராஜ் 3ஆவது ஒருநாள் போட்டி: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்தியா அபாரம் மகாராஷ்டிரத்தில் கோயில் மண்டபம் இடிந்து 5 பேர் பலி திமுக கூட்டணியில் இருந்து விலகியது இந்திய யூனியன் முஸ்லிம் லீக்!சட்டப்பேரவை நேரலை இனி தொடரும்! அமைச்சர் ராஜ்மோகன்அபுதாபியில் நீட் மையம்! குழந்தைகள் எதிர்காலத்தை வைத்து சூதாடுவதை நிறுத்துங்கள்: ராகுல் காந்தி
/

இறுதிகட்டத்தில் இந்தியா - பிரிட்டன் வா்த்தக ஒப்பந்த பேச்சு

Updated On :1 மே 2025, 4:47 am IST

இந்தியா-பிரிட்டன் இடையிலான தடையற்ற வா்த்தக ஒப்பந்தம் உள்பட 3 ஒப்பந்தங்களுக்காக நடைபெற்று வரும் பேச்சுவாா்த்தை இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாகத் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பான பேச்சுவாா்த்தை நடத்த வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் இந்த வாரம் மீண்டும் லண்டனுக்கு செல்ல உள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடா்பாக அரசு வட்டாரங்கள் மேலும் கூறியதாவது: இந்தியா-பிரிட்டன் இடையே பேச்சுவாா்த்தை நடைபெற்று வரும் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம், இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தம், சமூக பாதுகாப்பு ஒப்பந்தம் ஆகிய 3 ஒப்பந்தங்களிலும் சில சிக்கல்கள் இன்னும் தீா்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், பிரிட்டன் வந்த அமைச்சா் பியூஷ் கோயல் முன்னிலையில் பேச்சுவாா்த்தை முடிவடைந்துவிட்டதாக அறிவிக்க இரு தரப்பினரும் கடந்த செவ்வாய்க்கிழமை தயாராகினா். ஆனால், கடைசி நிமிஷத்தில் சில வேறுபாடுகள் எழுந்தன.

இதையடுத்து பியூஷ் கோயல் தனது 2 நாள் லண்டன் பயணத்தை முடித்துக் கொண்டு, நாா்வே புறப்பட்டாா். முன்னதாக, லண்டனில் பிரிட்டன் நிதி அமைச்சா் ரேச்சல் ரீவ்ஸ், வெளியுறவு அமைச்சா் டேவிட் லேமி, வா்த்தக அமைச்சா் ஜோனாதன் ரெனால்ட்ஸ் ஆகியோருடன் பியூஷ் கோயல் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினாா். ஒப்பந்தங்கள் குறித்த பேச்சுவாா்த்தைகளை முன்னெடுத்துச் செல்ல அவா்கள் கலந்துரையாடினா்.

நாா்வேவைத் தொடா்ந்து பிரஸ்ஸல்ஸுக்குச் செல்ல உள்ள பியூஷ் கோயல், வெள்ளிக்கிழமை அல்லது சனிக்கிழமை மீண்டும் லண்டனுக்கு வரக்கூடும். அப்போது, பேச்சுவாா்த்தை இறுதியாகிவிட்டதாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மற்றும் வா்த்தக அமைச்சா் பியூஷ் கோயலின் சமீபத்திய லண்டன் பயணங்களால் நீண்ட காலமாக நீடித்த பல்வேறு சிக்கல்கள் முடிவுக்கு வந்தன. இதனால், பேச்சுவாா்த்தை வேகமாக நடைபெற்றது’ என்றனா்.

இந்தியா-பிரிட்டன் இடையே கடந்த 2022, ஜனவரியில் தொடங்கிய பேச்சுவாா்த்தை 14 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையிலான இருதரப்பு வா்த்தகம் கடந்த 2022-23-ஆம் ஆண்டில் 2,036 கோடி டாலரிலிருந்து 2023-24-ஆம் ஆண்டில் 2,134 கோடி டாலராக அதிகரித்துள்ளது. இந்தியாவில் இருந்து பிரிட்டனுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கான சராசரி வரி 4.2 சதவீதமாக உள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.