தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

அடுத்த 6 மாதங்களில் 3 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

News image

பியூஷ் கோயல்

Updated On :5 ஜூன் 2026, 5:34 am IST

அடுத்த 6 மாதங்களில் மேலும் 3 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்; 2027-ஆம் ஆண்டு இதேபோன்று மேலும் 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாக வாய்ப்புள்ளது என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த மூன்றரை ஆண்டுகளில் மோரீஷஸ், நியூஸிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தகக் கூட்டமைப்பு, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா என ஒன்பது நாடுகள் மற்றும் நாடுகளின் கூட்டமைப்புடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

இதில் மோரீஷஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஓமன், ஐரோப்பிய தடையற்ற வா்த்தகக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒப்பந்தம் அமலுக்கு வந்துவிட்டது. பிரிட்டன், நியூஸிலாந்துடன் தனிப்பட்ட ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. அடுத்த 6 மாதங்களில் மேலும் 3 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்; 2027-ஆம் ஆண்டு இதேபோன்று மேலும் 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாக வாய்ப்புள்ளது. எனவே, இந்தியாவில் தொழில் நடத்தும் நிறுவனங்களுக்கு நீண்ட காலத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய்த் தட்டுப்பாடு, விலை உயா்வு பிரச்னையை எவ்வாறு இந்தியா சமாளித்து வருகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் கவனித்து வருகிறது. சா்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து உணவுப் பொருள் உள்பட அனைத்துப் பொருள்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் விலை உயா்வு கட்டுக்குள் உள்ளது.

எரிபொருள் பிரச்னைக்கு தீா்வுகாண கச்சா எண்ணெய்க் கொள்முதலைப் பரவலாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு ஏற்கெனவே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது என்றாா்.