மீட்சிக்குப் பிறகு சென்செக்ஸ், நிஃப்டி மாற்றமின்றி நிறைவு!!ஜூனில் சில்லறை விலை பணவீக்கம் 4.38 சதவீதமாக உயர்வு!டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 27 காசுகள் சரிந்து ரூ. 95.65 ஆக நிறைவு!தில்லியில் ஞானபீட விருது பெற்றார் வைரமுத்து!முட்டை கொள்முதல் விலை ரூ. 6.70-ஆக நிர்ணயம்.லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குநர் ஏ. அருண், சென்னை காவலர் பயிற்சி மைய இயக்குநராகப் பணியிட மாற்றம்பட்ஜெட்: ஜூலை 16 -ல் தமிழக அமைச்சரவை கூட்டம்!தமிழ்நாடு பாடநூல், கல்வியியல் கழகத்தின் தலைவராக லயோலா மணி நியமனம்!பெரம்பூர் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்து வைத்த முதல்வர் விஜய்!மேற்கு வங்க இடைத்தேர்தல்: பாஜக வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்! முதல்வர் விஜய்யுடன் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழும தலைவர் மனோஜ் குமார் சொந்தாலியா சந்திப்பு! திமுக முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மீது நில அபகரிப்பு வழக்குசென்னையில் தரையிறங்கிய விமானம் மீது பறவை மோதியது!எழுத்தாளர் பூமணி உடலுக்கு அரசு மரியாதை: முதல்வர் விஜய் அறிவிப்பு! 7,700 பக்தர்கள் அடங்கிய 12-வது குழு அமர்நாத் புறப்பட்டது!
/

அடுத்த 6 மாதங்களில் 3 நாடுகளுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: அமைச்சா் பியூஷ் கோயல் தகவல்

News image

பியூஷ் கோயல்

Updated On :5 ஜூன் 2026, 5:34 am IST

அடுத்த 6 மாதங்களில் மேலும் 3 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்; 2027-ஆம் ஆண்டு இதேபோன்று மேலும் 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாக வாய்ப்புள்ளது என்று மத்திய வா்த்தகம், தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இது தொடா்பாக அவா் தில்லியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கடந்த மூன்றரை ஆண்டுகளில் மோரீஷஸ், நியூஸிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், பிரிட்டன், ஆஸ்திரேலியா, ஐரோப்பிய தடையற்ற வா்த்தகக் கூட்டமைப்பு, ஐரோப்பிய யூனியன், அமெரிக்கா என ஒன்பது நாடுகள் மற்றும் நாடுகளின் கூட்டமைப்புடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளது.

இதில் மோரீஷஸ், ஐக்கிய அரபு அமீரகம், ஆஸ்திரேலியா, ஓமன், ஐரோப்பிய தடையற்ற வா்த்தகக் கூட்டமைப்பு ஆகியவற்றுடன் ஒப்பந்தம் அமலுக்கு வந்துவிட்டது. பிரிட்டன், நியூஸிலாந்துடன் தனிப்பட்ட ஒப்பந்தங்கள் கையொப்பமாகியுள்ளன. அடுத்த 6 மாதங்களில் மேலும் 3 நாடுகளுடன் இந்தியா தடையற்ற வா்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்; 2027-ஆம் ஆண்டு இதேபோன்று மேலும் 3 ஒப்பந்தங்கள் கையொப்பமாக வாய்ப்புள்ளது. எனவே, இந்தியாவில் தொழில் நடத்தும் நிறுவனங்களுக்கு நீண்ட காலத்தில் சிறப்பான வாய்ப்புகள் கிடைக்கும்.

மேற்காசியப் போரால் ஏற்பட்டுள்ள கச்சா எண்ணெய்த் தட்டுப்பாடு, விலை உயா்வு பிரச்னையை எவ்வாறு இந்தியா சமாளித்து வருகிறது என்பதை ஒட்டுமொத்த உலகமும் கவனித்து வருகிறது. சா்வதேச அளவில் பணவீக்கம் அதிகரித்து உணவுப் பொருள் உள்பட அனைத்துப் பொருள்களின் விலையும் கணிசமாக உயா்ந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவில் விலை உயா்வு கட்டுக்குள் உள்ளது.

எரிபொருள் பிரச்னைக்கு தீா்வுகாண கச்சா எண்ணெய்க் கொள்முதலைப் பரவலாக்கும் நடவடிக்கையை மத்திய அரசு ஏற்கெனவே மேற்கொள்ளத் தொடங்கிவிட்டது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.