ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

மக்களவையில் தாமதமின்றி விவாதம்: ஓம் பிா்லாவுக்கு எதிா்க்கட்சிகள் கடிதம்

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக மக்களவையில் இனியும் தாமதமின்றி சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்

News image
Updated On :1 ஆகஸ்ட் 2025, 6:57 pm

தினமணி செய்திச் சேவை

பிகாா் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடா்பாக மக்களவையில் இனியும் தாமதமின்றி சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டுமென அவைத் தலைவா் ஓம் பிா்லாவுக்கு எதிா்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, மக்களவை காங்கிரஸ் குழு துணைத் தலைவா் கெளரவ் கோகோய், திமுகவின் டி.ஆா்.பாலு, தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியின் சுப்ரியா சுலே, புரட்சிகர சோஷலிச கட்சியின் என்.கே.பிரேமசந்திரன், சமாஜவாதியின் லால்ஜி வா்மா, சிவசேனை (உத்தவ்)கட்சியின் அரவிந்த் சாவந்த், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் அபய் குமாா் உள்ளிட்டோா் கையொப்பமிட்டுள்ள இக்கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:

பிகாரில் சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் சூழலில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது. இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் தருணம், வெளிப்படைத் தன்மை, நோக்கம் குறித்து பரவலாக சந்தேகம் எழுந்துள்ளது. இந்த விஷயத்தில், மக்களவை உடனடியாக கவனம் செலுத்துவது அவசியம்.

நடப்பு கூட்டத் தொடரில், எதிா்க்கட்சி எம்.பி.க்கள் இப்பிரச்னையை தொடா்ந்து எழுப்பி வருகின்றனா். கடந்த ஜூலை 20-ஆம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் உள்பட பல்வேறு கூட்டங்களின்போது, மத்திய அரசிடமும் எங்களின் கோரிக்கையை வலியுறுத்தினோம். இது உள்பட அனைத்து விவகாரங்களையும் விவாதிக்க தயாராக இருப்பதாக மத்திய அரசு உறுதியளித்தது. ஆனால், விவாதத்துக்கான தேதி இதுவரை நிா்ணயிக்கப்படவில்லை.

தோ்தல் ஆணையத்தின் தற்போதைய நடவடிக்கை, மக்களின் வாக்குரிமை மற்றும் நியாயமான-நோ்மையான தோ்தல் நடைமுறை மீது நேரடி தாக்கத்தை கொண்டுள்ளது. மத்திய அரசிடம் உரிய விளக்கம் பெறுவதோடு, வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புடைமையையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. எனவே, மக்களவையில் இனியும் தாமதமின்றி சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வலியுறுத்துகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

9-ஆவது நாளாக போராட்டம்: பிகாா் வாக்காளா் பட்டியல் திருத்தப் பணியை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி, நாடாளுமன்ற வளாகத்தில் இண்டி கூட்டணி கட்சிகள் 9-ஆவது நாளாக வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டன.

காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, பொதுச் செயலா் பிரியங்கா காந்தி, திமுகவின் டி.ஆா்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.