இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தேர்தல் ஆணையத்துக்கு எதிராக ஆதார அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள்: ராகுலுக்கு ராஜ்நாத் சவால்!

ஆதாரங்களை வெளிப்படுத்த ராகுலுக்கு ராஜ்நாத் சிங் சவால் விடுத்துள்ளார்.

News image
ராஜ்நாத் சிங்
Updated On :2 ஆகஸ்ட் 2025, 10:24 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிகாரில் தேர்தல் ஆணையத்துக்கு எதிராக தன்னிடம் வைத்திருப்பதாகக் கூறப்படும் ஆதாரங்களின் அணுகுண்டை வெடிக்கச் செய்யுங்கள் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சவால் விடுத்துள்ளார்.

மாநில தலைநகரில் ஊடக நிறுவனம் ஏற்பாடு செய்த விழாவில் உரையாற்றிய ராஜ்நாத் சிங் கூறுகையில்,

பிகாரில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறுக்கு வழி. அதில் என்டிஏ கீழ் ஒரு பாதை மேலும் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும். அதேசமயம் மற்றொரு பாதை இந்தியா கூட்டணியின் கீழ் மாநிலத்தை அதன் பழைய நிலைக்கு அதாவது நீதியின்மை மற்றும் ஜாதி மோதலுக்குக் கொண்டு செல்லும். மாநிலத்தை எந்தவழியில் கொண்டுசெல்வது என்பது மக்கள் கையில்தான் உள்ளது.

ராகுல்காந்தி தன்னிடம் ஒரு அணுகுண்டு இருப்பதாகக் கூறுகிறார். அப்படியானால் அவர் உடனடியாக அதை வெடிக்கச் செய்து, தன்னை ஆபத்திலிருந்து விடுவித்துக்கொள்ள வேண்டும்.

முன்னதாக, ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் பூகம்பம் வெடிக்கும் என்று மிரட்டினார், ஆனால் அவரின் நாடாளுமன்ற உரையில் அது ஈரமான பொய்யாக மாறியது.

இந்தியத் தேர்தல் ஆணையம் கேள்விக்கு இடமில்லாத நேர்மைக்கு நற்பெயரைக் கொண்ட ஒரு நிறுவனம். மாநிலத்தில் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடைபெறுவதை உறுதி செய்ய அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது.

அரசியலமைப்பு அமைப்பு குறித்து அற்பமான அறிக்கைகளை வெளியிடுவது எதிர்க்கட்சித் தலைவருக்குப் பொருந்தாது. அவரது சொந்தக் கட்சியின் கைகளில் ரத்தக்கறை படிந்துள்ளது என காங்கிரஸ் தலைவருக்கு அவர் நினைவூட்டினார். இவ்வாறு அவர் பேசினார்.

summary

Defence Minister Rajnath Singh on Saturday slammed Congress leader Rahul Gandhi for claiming to have an “atom bomb of evidence” which would prove that the Election Commission was committing “vote theft” in Bihar.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.