தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

முஸ்லிம் தலைமையாசிரியரை நீக்க பள்ளி குடிநீர்த் தொட்டியில் விஷம் கலப்பு! வலதுசாரி நபர்கள் கைது

பள்ளி முதல்வர் பணியில் ஒரு முஸ்லிம் நபர்: குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்த வலதுசாரி நபர்கள் கைது

News image
Updated On :3 ஆகஸ்ட் 2025, 9:59 pm IST

பள்ளி தலைமையாசிரியராக ஒரு முஸ்லிம் நபர் இருந்ததால் அந்த பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் விஷத்தைக் கலந்த வலதுசாரி அமைப்பு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கர்நாடகத்தில் அரசுப் பள்ளியில் முதல்வர் பொறுப்பிலிருக்கும் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவொரு ஆசிரியரை பணியிலிருந்து நீக்குவதற்காக அந்தப் பள்ளியின் குடிநீர்த்தொட்டியில் சிலர் விஷத்தைக் கலந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பெலகாவி மாவட்டத்தில் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இந்த அசம்பாவிதம் நடைபெற்றது.

இந்த வழக்கில் உள்ளூரில் செல்வாக்கு மிக்க தலைவராக அறியப்படும் ‘ஸ்ரீ ராம் சேனை’ அமைப்பின் தலைவர் ஒருவர் உள்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஹூலிக்கட்டி பகுதியில் செயல்படும் அரசு தொடக்கப் பள்ளியில் கடந்த 13 ஆண்டுகளாக தலைமையாசிரியராக இருப்பவர் சுலேமான் கோரிநாய்க். இந்தநிலையில், அவர் மீது களங்கம் ஏற்படுத்தி அவருக்கு அவப்பெயர் பெற்றுக்கொடுத்து அவரை பணியிலிருந்து விரட்ட மேற்கண்ட கைது செய்யப்பட்ட நபர்கள் முயற்சித்ததாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவர்கள் குடிநீர்த் தொட்டியில் விஷம் கலந்ததாகக் கூறப்படுகிறது.

விஷம் கலந்த குடிநீரை பருகிய மாணவர்களில் 12 பேர் உடல்நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளனர். அதன்பின்னரே, பள்ளியில் நடைபெற்ற சம்பவத்தை பெற்றோர்கள் மற்றும் பள்ளி நிர்வாகம் அறிந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் ஐந்தாம் வகுப்பு பயிலும் ஒரு மாணவனும் உடந்தையாகச் செயல்பட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது. அந்த மாணவனிடம் விஷம் அடைக்கப்பட்ட ஒரு குப்பியைக் கொடுத்து அந்த நபர்கள் குடிநீர்த் தொட்டியில் கலக்க மிரட்டியதாக மாணவன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இச்சம்பவத்துக்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மத வெறுப்பால் இந்த கொடுஞ்செயல் நிகழ்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

Summary

Karnataka School Water Tank Poisoned To Remove Muslim Principal

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.