நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

இண்டிகோ பொறுப்பேற்க வேண்டும்; இயல்பு நிலைக்குத் திரும்பும் விமான சேவை! - மத்திய அமைச்சர்

இண்டிகோ விமான சேவை குறித்து மக்களவையில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேச்சு ...

News image

மக்களவையில் மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு பேச்சு

Updated On :9 டிசம்பர் 2025, 12:54 pm IST

மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் ராம் மோகன் நாயுடு மக்களவையில் இண்டிகோ விமான சேவை பாதிப்பு குறித்து விளக்கமளித்தார்.

அவர் பேசியதாவது,

"இண்டிகோ விமான சேவையில் ஏற்பட்டுள்ள பிரச்னை தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் இண்டிகோ நிறுவனத்திற்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. மத்திய அரசின் கடுமையான விதிகளை மீறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும். பயணிகளுக்கு ரத்து செய்யப்பட்ட பயணங்களுக்கு கட்டணத் தொகை திருப்பி அளிக்கப்பட்டு வருகிறது.

இதுவரை ரூ.750 கோடிக்கும் அதிகமான தொகை ஏற்கனவே திருப்பித் தரப்பட்டுள்ளது, கூடுதல் கட்டணங்கள் இன்றி மீண்டும் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன.

பயணிகளுக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு இண்டிகோ முழுமையாகப் பொறுப்பேற்க கடமைப்பட்டுள்ளது. இந்தியாவின் விமானப் போக்குவரத்து சேவையை வலுப்படுத்துவதில் அரசு முழு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. முழுமையான இயல்பு நிலை திரும்பும் வரை அதிகாரிகள் கணிக்கணிப்பார்கள்' என்று தெரிவித்தார்.

அமைச்சர் ராம் மோகன் நாயுடுவின் பேச்சையெடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

Summary

Union Minister of Civil Aviation K Ram Mohan Naidu speaks on Lok Sabha over IndiGo fiasco

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.