இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த நவம்பா் மாத இறுதியில் இலங்கையை கடுமையாகத் தாக்கிய தித்வா புயல் கடலோர பகுதிகளில் மட்டுமின்றி நாட்டின் உள்பகுதியிலும் பரவலான வெள்ளம் மற்றும் நிலச்சரிவு விளைவுகளை ஏற்படுத்தியது. இலங்கையின் உண்மையான நண்பனாக விளங்கிய இந்தியா, ’ஆபரேஷன் சாகா் பந்து’ என்ற நடவடிக்கையைத் தொடங்கி உடனடி மீட்பு மற்றும் நிவாரணத்துக்கு நடவடிக்கை எடுத்தது. இந்தக் கடினமான தருணத்தில் எங்களுக்கு ஆதரவளித்த இந்திய அரசுக்கும் இந்தியா்களுக்கும் குறிப்பாக தமிழக அரசு மற்றும் மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.